Thursday, September 23, 2010

விரலே விழிகளென ஒரு தேவதை

video



5 வயது பெண்பிள்ளை.
ஒரு பியானோ விசையின் அளவே அவள் கையின் அகலம்!.
முறையாக இசை  கற்கவில்லை! 
கற்கத்தொடங்கவும் இல்லை!
தத்தெடுக்கப்பட்ட கிள்ளை!
வளரும் குடும்பத்தில் இசையின் இழை கூட இல்லை!
அந்த பிஞ்சு தேவதைக்கு பார்வைப் புலன் இல்லை!
பியானோவில் நர்த்தனமிடும் அந்த தளிர் விரல்கள் சொல்லும் செய்தி.....கதையல்ல பள்ளியில் தமிழ் பாடத்தில் நான் படித்த ஒரு அந்தகக்கவி வீரராகவம்பிள்ளை இருந்ததும், கவி புனைந்ததும் உண்மையோ உண்மையென்று!

காணொளியில் அவளை இளம் மொசார்ட் என்கிறார்கள்! கண்டபின் கண்ணிர் நிறைந்த என் விழிகள் கூறியது.... அந்தக் குழந்தை ஒரு தேவதை !

Wednesday, September 22, 2010

மீண்டும் ஒரு பிண்ணூட்டம்!

எழுத்தாளர் தமிழ்நதி அவர்கள் ஒரு பூனைப்பிரியர் என்பதும். அவர் வலைப்பூவில் விதவிதமாய் பூனைகள் வளர்வதும் அவர் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு தெரியும். அவருடைய சமீபத்திய பதிவு

”பூனைகளின் வீடு”

அதனுடைய தொடர்ச்சியாக எனக்குள் பூனைமாதிரி புஷு புஷுவென எழுந்த சிந்தனைகள், பழைய ஞாபகங்கள், 12 வருடமாய் பூனை வளர்த்த தோதில்லாமல் இருப்பது என்ற என் இயலாமை எகிற என் ஆற்றாமைகளையும் அருமையான் நினைவுகளையும் பகிர்ந்துள்ளேன்.

நான் பிறப்பதற்க்கு முன்பிருந்தே எங்கள் வீட்டில் பூனைக்குட்டி வளர்க்கும் பழக்கமுண்டு. எலிகளை விரட்ட வளர்க்கப்பட்டது என்றாலும், நாங்கள் வீட்டில் இல்லாத பொழுதுகளில் அம்மாவிடம் கதை கேட்பதும் திட்டு வாங்குவது என்ற எல்லா வகையான வசனத்திற்கும் எங்கள் பூனை அம்மா முகத்தை சீரியசாக பார்த்தபடி அமர்ந்திருக்கும், பெரும்பாலும் இரவில் என் மீது உடல்சூடு வேண்டி தூங்கிய பூனை குட்டிகள் ஏராளம்! காதுக்கு பக்கத்தில் கொர்ர் கொர் என சப்தத்தோடு அவை தூங்குவது அந்த பொடி வயதில் ரொம்ப பிடிக்கும். பூனை கால் நகத்தால் கீறிய காயங்கள் என் கைமுழுக்க இருக்கும்! பழகிய பூனை அழுந்த கடிக்காது! நாம் துணிந்து என்ன சேட்டை வேண்டுமெண்றாலும் செய்யலாம்! தாவி வாயால் பிடிக்கும்! அனால் அழுதக்கடிக்காது!!

பக்கத்து வீட்டு அல்ஷேசன் நாய் சங்கிலியை அறுத்துக்கொண்டு வரும்போதெல்லாம் கடித்த்தாலும், விபத்தில் பூனைகள் இறந்த போதும் மாய்ந்து மாய்ந்து அழுதிருக்கிறேன்! எங்கள் வீடு என் அம்மா நீங்கலாக் இயல்பான ஒரு பகுத்தறிவுக்குடும்பம்! என் பூனையை குறுக்கே போக விட்டு வெளியே போகும் குட்டி பகுத்தறிவாளனாய் என்னை காட்டிக்கொள்ள உதவியது எங்கள் பூனை!

வீட்டுக்குள் எங்கள் பூனையால் பாதி கைமா பண்ணப்பட்ட எலியையோ, அல்லது அஜீரனமாகி பலவித சப்தங்களோடு எங்கள் பூனை கக்கி வைத்தவற்றையோ யாரேனும் ஒருவர் சுத்தப்படுத்திவிடுவோம், அது பெரும்பாலும் அம்மாவாக இருக்கும். அப்போது பூனை நன்றாக் திட்டு வாங்கும்! அடிக்கமாட்டோம்! அம்மாவுடன் காலையில் 5 மணிக்கு எழுந்துவிடும், அடுப்படியில் கூட இருக்கும், வாசல் தெளித்து கோலம் போட்டுவிட்டு வரும்வரை வாசலில் உட்கார்ந்திருக்கும்! தமிழ்நதி அவர்களின் வலைப்பூவுக்குள் வரும்பொதெல்லாம் 27வயதுவரைக்கு பூனைகளோடு வாழ்ந்த பல அனுபவங்கள மனசுக்குள் வந்து போகும்! சென்னை வந்து 12 ஆண்டுகள் - 15 முறை வீடு மாற்றம்.

கடந்த காலகட்டத்தில் சமயத்தில் நான் என்னையே ஒரு வளர்ப்பு பிராணியாக கருதிக்கொள்ளும் வாழ்முறைகளையெல்லாம் கடந்தததில்....பூனை வளர்த்ததையெல்லம் - அது ஒரு பொற்கால்ம் என்று எண்ணிக்கொள்வேன், எவ்வளவு பெரிய பூனையாக இருந்தாலும் எப்படி தடவிக்கொடுத்து, சின்ன்ச்ச்சின்ன கடிகள் கீறல்கள் வாங்கி பிறகு என்னை விட்டு பிரியாத நபராக்கி விடும் பழைய கெட்டிக்காரத்தனம் மட்டும் அங்குசம் மட்டும் வைத்திருக்கு மாவுத்தன் மாதிரி எனக்கு ஒரு அடையாளம்! நிறைய கொழுத்தி போட்டுட்டீங்க தமிழ்நதி!

மணி என்ற் பெயரில் மட்டும் வரிசையாய் எண்ணற்ற பூனைகள், அவை போட்ட குட்டிகள், கண் திறக்கும் வரை அந்த குட்டிகளுக்கு பாலை ஊட்டிய நாட்கள். இங்கிலீஷ் மீடியத்தில் எல்கேஜி படித்த அக்கா மகளுக்காக ஒரு பூனை குட்டிக்கு புஸ்ஸி எனப்பெயரிட்டு விட்டு வீட்டில் ஒவ்வொருவரிடமும் “நோ மணி, அது பேரு புஸ்ஸி” என்று அவள் சொல்லித் திரிந்த நாட்கள். இப்போது அவள் மகளுக்கு 2 வயதாகிறது. பூனைகள் அற்புதமான பிராணிகள்! வினோதமானவையும் கூட! நல்ல வெயில் காலத்தில் ஃபேனுக்கு கீழே மல்லாக்க படுத்தபடி கால் நான்கையும் விரித்தபடி அவை தூங்கும் அழகு ஒரு குழந்தை தூங்குவதை ரசிப்பதற்கு ஒப்பாகும். இரவு நேரங்களில் கூடலுக்காக அவை கடுமையாக கத்துவது குழந்தை அழுவது போல் இருக்கும்! விஷ்யம் புரியாமல் நம்ம பூனைக்கு ஏதாவது ஆயிடுமோ என்று மற்ற பூனையை அப்போது துரத்தி அடித்ததை இப்போது நினைத்தால் தவறாக்ப் படுகிறது!

விரைவில் ஒரு பூனைக்குட்டி வளர்த்துவேனுங்க தமிழ்நதி!

Sunday, September 19, 2010

1 கவிதை, 1 விளக்கம்

பல்லிகள் விழும்
ஒவ்வொரு
மணித ஸ்தலத்துக்கும்
ஒவ்வொரு பலன்!
இடம் மாறி
மனிதன் விழுந்தால்
ஒரே பலன்
பல்லிக்கு
துர்மரணம்!

______________________________________

ஜஸ்ட் 15 மினிட்ஸுக்கு முன்னாடி நடந்த விபத்து! பராக்கு பார்த்துக் கொண்டே பாத்ரூமை நோக்கி நடக்கையில் காலுக்கு கீழே ஒரு சரக்! பதினெட்டு மணியோ, பதினெட்டு நாளோ ஆன ஒரு இளம் பருவ பல்லி. பாதை கடந்ததோ, பூச்சி பிடித்ததோ; பார்க்க பார்க்க சாகத் தொடங்கி விட்டது! பிடிக்காத இனம் என்றாலும் ரொம்ப பாவமாகவும் குற்ற உணர்ச்சியுமாக இருந்தது! என்றாலும் உடனடியாக சுயநலம் வேலை செய்யத்தொடங்கிவிட்டது! ஹைஜீனிக்கின் பொருட்டு விளக்குமாறால் தள்ளிக்கொண்டு சென்று வாசலைத்தாண்டி தள்ளிவிடுகையிலும் கொஞ்சம் உயிர் இருந்தது! நாய்ன்னா ஓகே! பல்லியை எப்படி டவலில் சுருட்டி எடுத்துக் கொண்டு டாக்டரிடம் ஓடுவது என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்!

கடந்த 5 நிமிடமாக கற்பனையில் ஆயிரக்கனக்கான பல்லிகள் ஒன், டு,த்ரி சொல்லி மொத்தமாக என் மீது விழுகிறது. அடுத்தது 25 அடி உயரம் - 75 அடி நீளம் உள்ள ஒரு பிரமாண்ட பல்லி என்னிடம் பயங்கர குளோசப்பில் மூச்சிரைத்தபடி உறுமுகிறது, அதன் வாயிலிருந்து அப்போதுதான் தின்னப்பட்ட கரப்பான் பூச்சி வாசம் வ்ருகிறது! தட்டென சுயநிலைக்கு வருகையில். காற்றில் ஆடும் பாலிதின் கவர் சத்தம் கூட பதட்டப்படுத்துகிறது! ஷ்ஷு......அவ்வளவுதானா.....வேறெதாவது ராத்திரி கனவில் வருமோ!

Tuesday, September 14, 2010

மல்லிச்சு - டூ நெம்பர்ஸ் ஆஃப்......

-
-
-

அடக்கம் - உய்க்கும்

என்றைக்கோ
எப்போதோ
யாருடனோ
நடந்த மகா சண்டையில்
அமைதி காத்து - பிறகு
சமாதானத்தில்
பேச மறுத்த
சின்ன தாத்தாவை
இப்பவரை
மற்ற தாத்தாக்கள்
மரியாதையாய்
பார்க்கிறார்கள்

_____________________________________________________________________
-
-
-

ப்ளீஸ் செக் த நம்பர்

இப்ப
ராத்திரியே
கிளம்பறேன்மா!
என்ற பாலுவின் ஃபோன்காலும்
காலைல 3 மணிக்கு
இண்டியால இருப்பேன்!
என்ற பாபுவின் போன்காலும்
பேசிய பின்
வீட்டை பூட்டிவிட்டு
ஏர்போர்ட் போகும்
திட்டத்தை
கைவிட்டாள்
ராஜூவின் அம்மா

Sunday, September 12, 2010

ஒரு ட்ரெய்லரின் ரிவியு !!@#$%&*

எந்திரன் ட்ரெய்லர் - விட்டலாச்சார்யா சயின்ஸ் பிக்‌ஷன் படம் எடுத்த மாதிரி இருக்குது!

தொழில் நுட்பம், பிரமாண்டம், 40ஐ நெருங்கிய பின்பும் உலக அழகியாய் உள்ளூரில் மட்டும் உலாவும் ஐஸ்வர்யா பச்சானுக்கு மத்தியில் ஷ(ச)ங்கரின் அதிரிபுதிரியான கெட்டப், செட்டப், மேக்கப்புகளில் நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினி தம்மாதூண்டா டமாஷா இருக்கார்!

பேருதான் சூப்பர் ஸ்டார், இவருக்கு எதுக்கு 150கோடி பிண்ணனில படம்? ”பசங்க, வெண்ணிலா கபடி குழு, சுப்ரமணியாபுரம்” டைப்புல எவன் சப்போர்ட்டும் இல்லாம், சாதரணமா சராசரி மேக்கப் போட்டுட்டு, தனியா சிங்கம் மாதிரி ஸ்கீரின்ல வந்து நின்னாலே சும்மா அதிரனும்ல!

வயசான காலத்துல அமிதாப் ”ஃபா, லாஸ்ட் லியர்”ர்னு பலகாலத்துக்கும் அவர் நடிப்புக்குபெயர் சொல்ற படமா நடிக்கிறார்! ஆனா நம்மாளு இவ்வளவு புகழ், பணம் சேர்ந்த பின்னாடியும் நடிப்புக்கு தீனி போடற படங்களை செய்யாம தன்னை பொம்மை மாதிரி செய்து காசு பார்க்கிற கும்பல்கள்கிட்டயே கைகோர்த்துட்டு நிக்கிறாரே! தலைவா, உங்களுக்கு இன்னுமா பணத்தாசை போகலே!!

ட்ரைலரே பல ஆங்கிலப்படத்த நினைவுபடுத்துது! மிகப் பெரிய பட்ஜெட் ஆங்கலப் படத்தகூட சில ஆயிரங்கள்ல தமிழ் டப்பிங் செய்து பாத்தரலாமே! அத எதுக்கு அமெரிக்கால போய் தமிழ்ல ரீமேக் பண்றீங்க?

நிஜத்துல ஜப்பான்காரனே இப்பதான் நடக்கற ரோபோ, ஆடற ரோபோன்னு கண்டுபுடிச்சிட்டிருக்கான்! இது சங்கரின் அநியாயமானா ஃபேண்டசி ரோபோ படம்.... அதுல நீங்க..... செய்யலமா தலைவா? நீங்க நியாயமா நம்ம ஊருக்கு, நம்ம மக்களுக்கு, நம்ம நாட்டுக்கு தேவையான கருத்த நம்ம நாட்டு ஆளா நின்னுதானே சொல்லனும்! ஃபாரின் ரிட்டர்ன் சிவாஜி சொன்ன கருத்து எத்தனை பேருக்கு போய் சேர்ந்துச்சு? சிவாஜி ஸ்ரயாகூட டாண்ஸ் ஆடுனது, பஞ்ச் டயலாக் பேசினது, விவேக்கூட காமெடி பண்ணினதுன்னு தேவையே இல்லாத பொழுதுபோக்கு லாகிரிவஸ்துக்கள்தானே இன்னுமும் ரிப்பீட்டா போட்டுகிட்டே இருக்காங்க! உங்களுக்கு தெரியாததா?

நீங்க சொன்னா கேக்கறதுக்கு ஒரு ஊர் இல்ல , நூறு ஊர் இல்ல ஒரு மாநிலம் அளவுக்கு இளைஞர் கூட்டம் காத்திருக்குது! 6லிருந்து 60வரை, எங்கேயோ கேட்ட குரல் மாதிரி நல்ல படம் எடுக்கற புது சின்ன இயக்குனர்கள் நிறைய இருக்கிறாங்க! அவங்கள தேர்ந்தெடுங்க! இல்லயா நல்ல சீனியர்களா பார்த்து அவங்ககூட படம் பன்னுங்க! தனிக்காட்டு ராஜால சொன்ன விஷ்யங்கள இப்ப சொல்லுங்க, அதுதான் உங்க ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் த்ங்கக்காசு கொடுத்தவங்களுக்கு நீங்க செய்யற நன்றிக்கடன்! அதெல்லாம் விட்டுட்டீங்க, , “பல வருஷமா முயற்சி பண்ணி இப்பதான் ஐஸ்வர்யாராய் எனக்கு ஹீரோயின் ஆனாருன்னு” பொது மேடைல சொல்றீங்க! உங்க ரசிகனுக்கு அடுத்த பத்து வருஷ் வாழ்கை லட்சியம் என்னென்னவா மாறப்போகுதோ? யோசிச்சீங்களா?

வர வர ஒரு தப்பான முன்னுதாரணம் ஆகறீங்க! அதனாலதான் பணக்கார வீட்டு பசங்க, அரசியல்வாதி வீட்டு பசங்கன்னு அடுத்த சூப்பர் ஸ்டாராகி கோடி கோடியா சம்பாதிக்கனும், புகழை சேர்க்கனும்னு தாவி தாவி வரானுங்க! நல்ல நடிப்பார்வம் உள்ள, திறமை உள்ள, உங்களை மாதிரியே ரொம்ப கஷ்டப்பட்டு நடிக்க முயற்சி செய்துகிட்டு இருக்கற இன்றைய சிவாஜிராவ் கெய்க்வாட்களுக்கு தமிழ்சினிமால இப்ப எண்ட்ரியே கிடையாது! அதுக்கு நீங்களும் ஒரு காரணமாகறீங்கன்னு தோனுது!!

ரஜினி ஒரு வித்யாசமான முகபாவங்கள் உள்ள நல்ல நடிகர், அவர தமிழ்நாட்டுல வீணடிக்கறாங்கங்கற டைப்புல இயக்குனர் ஃபாசில் சொன்னத சின்ன குழந்தை மாதிரி “அப்பிதான் ப்ன்னுவேன்னு” நீங்க செய்தா உங்ககூட என்னதான் பேசறது?

தானைத தலைவா நடிப்புக்கு ஒரு ரோல் மாடல் ஆகுங்க! காசு சம்பாதிக்கறதுலயும், பொய்யான புகழையும் சம்பாதிக்கறதுல இல்ல!

ஆனா ஒன்னு மக்களே! அவரு அவர் மகளுக்கு கல்யாணம் பண்றாரு! தேவையில்லாம கைகாச செலவு பண்ணிட்டு சென்னைக்கு வந்து டிராபிக் பண்ணிட்டு சிரமப்பட்டு சிரமப்படுத்தாதீங்கன்னு தன்னோட ரசிகர்கள்கிட்ட சொன்னாரு! என்னவோ இவங்ளோட மாமனார் அவங்க கொழுந்தியா கல்யாணத்துக்கு அழைக்கலேங்கற மாதிரி, ‘ஐய்யகோ தெய்வகுத்தமாயிடுச்சே! ரசிகர்களை வரவேண்டாமின்னுட்டாரே! ரசிகனை தவிர்த்துட்டாரேன்னு கட்டுரையும் செய்தியும் போட்டு ஒரு விர்சுவல் கலவரம் பண்ணின பத்திரிக்கைகளே! நீங்க பண்றதுதான் பாதி! அவரும் உங்களால கடுமையா குழம்பிப்போய் என்ன கண்றாவிடா இதுன்னு இப்ப மணமக்களை அறிமுகப்படுத்தும் விழான்னு ஊருலயே இல்லாத விஷயமெல்லாம் செய்ய வைக்கிறீங்க! ரெம்ப அமைதியா அதயும் போட்டோ எடுத்து போட்டு சர்குலேஷன் ஏத்திக்குவீங்க இல்ல! கொடுமைங்க! உங்க கோளாறாலதான் அவரும் இப்பிடியான படங்கள்ல தேடிப்போறாரோ என்னவோ!!

ஷ(ச)ங்கர் ஐயா, கமல் ரஜினின்னு இருக்கறவங்களுக்கெல்லம் மாறுவேடப்போட்டி மாதிரி மேக்கம் போட்,டு பெரும் பொருட்செலவுல ஊரு உலகத்துக்கெல்லாம் மெஸேஜ் கொடுக்கறீங்க! அதே சமயம், நடுத்தரக்குடுமபங்கள்கூட எல்லாருமா தியேட்டருக்குப் போய் படம் பார்க்கமுடியாதபடி ஏறியிருக்கற டிக்கட் விலை, தியேட்டர் கேண்டீன்களில் விற்கும் பண்டங்களின் கொள்ளை விலை, குடிக்க முடியாத காபி, தியேட்டருக்குள் பாதியில் நிறுத்தப்படும் ஏசி.... இதுக்கெல்லாம் மெஸேஜ் தரமாட்டீங்களா? கொடுக்க மாட்டீங்க! ஏன்னா நடக்காத விஷயங்கள மட்டுமே சொல்ற அந்நியனாச்சே நீங்க!

Saturday, September 11, 2010

ஒரு பின்னூட்டம்!

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! அதன் முக்கிய காரணம் கடவுள்தன்மைகள் என்று சொல்ல்ப்படும் குணங்களோடு பல மணிதர்கள் எனக்கு நண்பர்களாகவும் ஆசிரியர்களாகவும் வாய்த்திருப்பதுமே.

கடவுள் குணங்கள் என்பதைத் தாண்டி அதீத சக்தி, தன்னம்பிக்கை, செயல், ஆற்றல் என்பதில் புராண்ங்களில் கடவுள்களின் விஸ்வரூபம் என்பதற்க்கொப்பான சக்தியை பல சமயங்களில் குழந்தைகள் வெளிக்காட்டுவதை கூர்ந்து பார்க்கும் எல்லோருக்கும் புரியும். குழந்தைகள் கடவுள் ரூபம்! அவற்றை அழகுபடுத்தி அழகுபடுத்தி ஷோகேஸ் பொம்மையாகவோ அல்லது சரியாக கவணிக்காது புதைந்து கிடந்தால் தொல்பொருளாகவோ கடவுளும் ப்யன்ற்று போகும்! அதேசமயம் ப்ரதிஷ்டை செய்து, அன்றாடம் சரியாக கவணித்து பாதுகாத்தால் குழந்தையிடமிருந்து கடவுள்தன்மையை உணரலாம்! அதன் ஆற்றலும் புரியும்!

இப்போது இந்த வலைப்பூவை ஒருநடை பார்த்துவிட்டு வந்து தொடருங்களேன்....ப்ளீஸ்!

இந்த குழந்தையும் அப்படி ஒரு ப்ரதிஷ்டை செய்யப்பட்ட அவதாரமே! ஆத்தாடி.... அந்த கண்ல இருக்கற ஒளிய பாருங்களே, கள்ளமில்லை, அவநம்பிக்கை துளியுமில்லை, ஓஷோ சொல்வது மாதிரி செயலே தான் என்பதாக செய்யும் செய்லில் இரண்டறக்கலந்து பெறும் இன்பத்தில் ஊறும் ஆனந்தச்சிரிப்பில்.... அடடா.... இறைவனைத் தேடி செல்லும் இடம் எது என்பதற்க்கு பொருள் சொல்கிறதே!!

அற்புதமான பதிவு தோழர்!!

அறிமுகப்படுத்திய க. பாலாசிக்கு நன்றி!

Friday, September 10, 2010

சிந்தனி: மதராசி பட்ட ரணம்

சிந்தனி: மதராசி பட்ட ரணம்: "புதிய பறவை சினிமாவில் கிளைமாக்சின் போது நடிகர் திலகம் நடிகை சரோஜா தேவியை பார்த்து “என்னை கைது செய்ய உனக்கு காதல் என்கிற புனிதமான உறவுதான் கி..."

மதராசி பட்ட ரணம்

புதிய பறவை சினிமாவில் கிளைமாக்சின் போது நடிகர் திலகம் நடிகை சரோஜா தேவியை பார்த்து “என்னை கைது செய்ய உனக்கு காதல் என்கிற புனிதமான உறவுதான் கிடைத்ததா?’ என்று கேட்பார். அது ஒரு உணர்ச்சிபூர்வமான காட்சி! பல தருணங்களில் நம் சகமணிதர்கள் நட்பு மற்றும் உறவு என்கிற பெயர்களில் சுயநலமாக செயல்படும் கொடுமைகளை கண்டிருக்கிறோம்.

அதுபோலவே ஊடகங்கள் மற்றும் கலை என்கிற பெயரில் மிக அற்புதமான வடிவங்களில், டிஜிட்டல் தொழில் நுட்பங்களில் சிறந்த கலைஞர்கள் உழைப்பில் நம் பண்பாடு, குடும்ப அமைப்பு, தேசிய ஒருமைப்பாட்டு உணர்வு போன்றவைகளை சிலர் நீங்களாக அணைவரும் சிதைத்துக்கொண்டிருப்பதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறோம் அல்லது அதில் ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நம்மை முந்திச் செல்லும் அயல்நாடுகளை விடவோ அல்லது அண்டை வீட்டானை விடவோ வேகமாக ஓடி அவனவன் வாழ்வை பிடித்துக்கொள்ளும் அவலமான சூழலில் நம்மை ஆசுவாசப்படுத்த நல்லவை ஒன்றிரண்டைத் தவிர பலரகமான விஷங்களே வாய்த்திருக்கிறது.

எல்லா தொழிலையும் போலவே சினிமாவும் ஒரு தொழில்! அது நிச்சயம் கலைவடிவம் அல்ல! டாஸ்மாக் மாதிரி சினிமா ஒரு போதை வஸ்துவாகி பலகாலமாகிவிட்டது. நமக்கும் ஏறக்குறைய வாழ்வின் எல்லாவிஷயங்களிலும் உணர்ச்சிப்பூர்வமாக அல்லாமல் போலியான யதார்தத்தில் வாழப்பழகிவிட்டோம்!

ஆனாலும் நம் எல்லோருக்கும் புனிதமானவைகள் என்கிற தனித்தனி ரசனைகள், உணர்ச்சிகள், உறவுகள் என ஒன்றிரண்டாவது உள்ளன என நம்புகிறேன்! அதில் அணைத்து இந்தியர்களுக்கும் அல்லது பெரும்பான்மை இந்தியர்களுக்கு பொதுவானது தேசபக்தி! ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைகளாக்கி வைத்திருந்ததும், அதிலிருந்து மிதவாதிகளும் தீவிரவாதிகளும் ஒருசேர போராடி பெற்ற சுதந்திரம் என்பது நம் நாட்டு வரலாற்றிலும் சரி, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சரி மிக முக்கியமான புனிதமான உணர்வாகும்.

நான் தனிப்பட்ட முறையில் முரன்பட்டாலும் முதல்வர் கலைஞரும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும் பெரும்பாண்மை தமிழர்கள் எற்றுக்கொண்ட தலைவர்கள் என்பது ஒத்துக்கொள்ளவேண்டிய உண்மை! பெரும்பாணமையானவரின் கருத்து அல்லது ஊணர்ச்சிகளை மதித்தலே மணிதம்! அதில் நல்ல ஒளிப்பதிவாளர், நல்ல இசை, நல்ல கலைஞர்களை வைத்து சம்பந்தப்பட்ட தலைவர்களை தரம்தாழ்த்தி எடுக்கப்பட்ட திரைப்படமான ‘இருவர்’ நான் வெறுக்கும் சினிமாக்களில் முதலாவது சினிமா.

OST Track என்று ஹாலிவுட் பட்ங்களின் பின்னணி இசையை த்னியாக சந்தைப்படுத்துவார்கள் - பல இடங்களில் அதற்க்கொப்பான இசையோடு அற்புதமான ஒளிப்பதிவாளர், கலை இயக்குனரின் கடுமையான உழைப்பில் ஒரு மிகச்சாதரனமான காதல் கதையை கொண்ட படம் ஒன்று பார்த்தேன். அதில்மிக வேதனையானது அந்த ஒரு மசாலா கதைக்கு சுதந்திரப்போராட்டம் மற்றும் சுதந்திர நாள் ஆகியவற்றை களமாக்கி, மக்களின் தேசிய உணர்வை மிக சாதுர்யமாக முதலீட்டாக்கி அதே சமயம் அவ்வுணர்வை எவ்வளவு உதாசீனப்படுத்த முடியுமோ அவ்வளவும் செய்துள்ள படமான மதராசபட்டிணம் நான் மிகவும் வெறுக்கும் இரண்டாவது படமாகிறது. அந்தப்படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் ஆகியோரிடம் புதிய பறவை நடிகர்திலகம் மாதிரித்தான் கேட்கவேண்டும் “நீங்க பணமும் புகழும் சம்பாதிக்க உங்களுக்கு நம்ம தாய்நாட்டு சுதந்திரப்போராட்ட காலமும் அந்தநேரத்தில் வாழ்ந்த மணிதர்களும்தான் கிடைச்சாங்களா?”