ஆம் இந்திய விடுதலைப்போரும் எங்கோ ஒரு புள்ளியில்தான் தொடங்கியது! அந்தப்பொழுதில் ட்ச்சுகளையும் பிரெஞ்சுகளையும் முகலாயர்களையும் மெல்ல அப்புறப்படுத்திவிட்டு ஆங்கில வெறியர்கள் நம்மை ஆண்டுகொண்டிருந்த இருளான காலம்! தீவிரவாதிகள் எனவும் திருடர்கள் எனவும் சொல்லி ஆங்கிலேயர்களும் உள்ளூர் ஜமீந்தார்களும் போராளிகளை முதலில் கொன்றுபோட்டனர். பழையா பதிவுகளில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் திருடன் அந்தஸ்து கொடுத்து ஆங்கிலேயர்கள் பொய்யாய் பதிந்துள்ளனர் என்பது செவிவழிச் செய்தி!
சுதந்திர தாகம் அடங்கியது போலத்தெரிந்தாலும் அஹிம்சா என்று அண்ணல் காந்தியும், சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பு என பாபாசாகேப் அம்பேத்காரும், ஆயுதமே வழியென்ன்று சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் என்றும் ஏறக்குறைய 2 நூற்றாண்டுகளுக்கு பிறகு எல்லா திசை எதிர்ப்புகளையும் தாங்கமுடியாமல் வெள்ளையர்கள் ஓடிப்போயினர்! அவர்களுக்கு கூட்டிக்க்கொடுத்தும் காட்டிக்கொடுத்தும் வீடும் சொத்தும் வாங்கியவர்கள் அதற்கு முன்பே விழித்துக்கொண்டார்கள். 1930களில் தாசிகள் வழியாக புலனாய்வுத்தகவல்கள் பெற்று அவசர அவசரமாக இந்திய தேசிய காங்கிரசில் பெரும் பதவி பெற்றனர், தந்தை பெரியாரும் கப்பலோட்டிய தமிழன் வ.வு.சியும் காங்கிரஸ் விட்டகன்றது அப்போதுதான். 1947க்குப்பின் இந்திய சர்க்காரிலும் உள்நாட்டு சதிகாரர்கள் சிலர் உயர்பதவி வகித்தனர். சாதி வெறி பிடித்தவர்களையும் விடுதலைவீரர்கள் என பதிவு செய்தனர். தவறானவர்களும் நமை ஆண்ட ஆங்கிலேய நாய்களும் எழுதிய நமைப் பற்றிய பொய்யான வரலாறை அடிப்படையாகக்கொண்டதுதான் நம் சுதந்திரப்போராட்டக்கதைகளும் பள்ளிப் பாடங்களும்! இந்திய சுதந்திரப்போரில் ஆயுதம் தாங்கியவர்களின் பங்கு இருட்டடிக்கப்ப்ட்டது என்பதே உண்மை!!
நிற்க, அல்வின் டோப்ளர் முன்பே தன் “பவர் ஷிப்ட்டில்” சொன்னபடிக்கு தகவல் தொடர்பு என்பதற்கு அனுஆயுத வலு வந்துவிட்ட இந்த கதியில் மாவோயிஸ்ட்டுகள் என்றோரு இனம் தோன்றி வளரத்தொடங்கிவிட்டது. அது கூட எங்கோ ஒரு மூலையில்தான் தோன்றியுள்ளது என்பதை நினைவில் கொள்க!!
நாம் சுரண்டப்படுகிறோம் என்பது அறியாத தென்மாநிலங்களில் இப்போது சினிமா, டாஸ்மாக், பண்வெறி, நிலவெறி ஆகியவை கண்ணைகட்டிப்போட்டுள்ளது. ஆந்திராவில் நக்சல்கள் ஆளும் மாவட்டங்களில் மக்கள் நிம்மதியாய் வாழ்கிறார்கள் என்பது அரசிடம் கவர் வாங்காதவர் தரும் செய்தி !
சமீபமாக நம்மை ஆண்டவர்கள், ஆளுபவர்கள் யாரும் நல்லவர் இல்லை ஆனால் அவர் அன்றைய வெள்ளையருக்கு இணையான மூர்க்கம் கொண்டவர்கள், வசதி வாய்ந்தவர்கள் எண்ற பயத்தில் எனக்கென்ன, என் வீடு வாழ்ந்தால் போதும் அல்லது நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்கிற எண்ணத்தால்தான் கல்விகூட விலைபொருள் ஆகிப்போனதையும் எதிர்த்து குரல்கொடுக்காமல் வாழ்ந்து வருகிறது நம் திராவிட இனம்! நாம் விழித்துவிடமாட்டோம் என்கிற நம்பிக்கையில்தான் அன்றைய ஆண்டைகளுக்கு இணையாக நம் திராவிடதூண்கள் நம் முதுகின்மேல் சவாரி செய்து வருகிறது!
முதாலாளிகள் பண்ணாட்டு முதலாளிகளுடன் கைகோர்த்துக்கொண்டு நம்மை சுரண்ட சுரண்ட அடிமைகள் நாம் கொஞ்ச கொஞ்சமாய் உணர்வுரீதீயாய் சாகிறோம் என்கிற உண்மையை ஊருக்கு வெளிச்சம் போட்டுக்காட்டும் ஜோதி எங்கோ ஒரு மூலையில் புறப்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. ஆண்டுகள் பலவாகலாம் விடுதலை கேட்கும் புரட்சிக்கனல் நம் தென் எல்லையை தொட! ஏன இதைப்படிக்கும் எவருமே உயிர்ரோடில்லாத அடுத்த நூற்றாண்டாகவும் ஆகலாம். ஆனால் மாற்றத்துக்கான வித்து முளைவிட்டுள்ளது என்றேதான் தோன்றுகிறது! சொந்த தொகுதியிலேயே நல்லது செய்யாதவர் ஒருவர் நாட்டு நலனுக்காக ராஜினாமா நாடகம் தொடங்கியுள்ளார்! சிவகங்கையில் பல ஊர்களில் கழனிகளில் தேவையான தண்ணீர் இல்லை! ஒருபோகம் மட்டும் வானம் பார்த்த விவசாயம்! வறுமை வாட்ட மக்கள் தம் பிள்ளைகளை சாதரண பள்ளியில்கூட படிக்க வைக்கமுடியாத நிலை! மாற்றுத்தொழில் என்பது ஒன்றூ அங்கு இல்லவே இல்லை!! இதெல்லாம் திருட்டுத்தனமாய் ஜெயித்தவருக்கு எப்படி கண்ணில் தெரியும்!! பாவம், மறந்து போனார் அவரளவு படிக்காதவராயினும் மக்கள் உண்மை அறியத்தொடங்கிவிட்டனர் என்கிற உண்மையை!
வரப்போவது சர்வநிச்சயமாய் அகிம்சைப்போரல்ல ஆளும் வர்க்கத்தோரே! அது கில்லட்டின் கூர்மை கொண்ட புரட்சி! உங்கள் பாவங்களை இனிமேல் பிறக்கப் போகும் உங்கள் வாரிசுகள் ரத்தம் கழுவலாம். ஆனால் எம் வாரிசுகள் ஊழல் இல்லாத நாட்டில், வாரிசுகள் நடத்தும் அரச்சாட்சி இல்லாத நேர்மையான மக்களாட்சியில் வாழப்போகிறார்கள்! போருக்கான ஒரு விடிவெள்ளி, புரட்சிக்கான ஒரு பிரம்மமுகூர்த்தகாலம் இது! இருள் பிரியவில்லை என தூங்கிக்கொண்டுள்ளோம்! கவலை வேண்டாம் தாமதமானாலும் நல்விடியல் உத்தரவாதம்!