ஆகவே இதனால் அறியப்படும் நீதியாவது என்னவென்றால் “சராசரிகளின் வாழ்கையை பாதிக்கும் அளவுக்கு எல்லோருக்கும் சங்கம் இருக்கு!”
அப்படின்னா சாதி, அரசு வேலை, தனியார் பள்ளி முதலாளித்துவம் மற்றும் எல்லா முதலாளித்துவத்துக்கும் சம்பந்தம் துளியும் இல்லாத சராசரிகளுக்கு சங்கம் வேண்டாமா?
சராசரிங்கவறவன் யாரு?
முதல் நாள் முதல் ஷோ பார்த்தவன்லர்ந்து ஆள் வச்சு தீவளிக்கு ட்ரெயின் டிக்கட் போட்டவன் வரைக்கும் சராசரிதான்! அதாகப்பட்டது ஃபேஸ் புக்கு, ப்ளாக், ப்ஸ்ஸுன்னு கம்ப்யூடர்ல அறிவு மிஞ்சி வழியற அறிவுஜீவிலருந்து ஊருலருக்கற புத்திசாலித்தனங்களையெல்லாம் ஆபிஸூலயோ டீக்கடைலயோ பேசமட்டும் செய்யறவங்க, லேண்ட்மார்க் டிஸ்கவுண்ட்லர்ந்து தள்ளுபடி எங்கன்னு தேடித் தேடி அப்புரானியா ரெங்கநாதன் தெருவுல பர்ச்செஸ் பண்றத மட்டும் தன் இந்த மாதத்து சாதனையா திரியறவங்க வரைக்கும் நாம எல்லோரும் சராசரிதான்!
பப்ளிக்க மிரட்ற பப்ளிக்க உருட்டி புரட்ட நமக்கு ஒரு சங்கம் வேனுமே! அதனால ஓட்டு போடறதோட அப்பிடியே நாமளும் சங்கத்த அமைக்கறோம், அப்பிடியே........
ஊருக்கு ஊர் பஸ்ஸூ போகக்க்கூடாது! ஏரியா ஏரியா பஸ்ஸ நிறுத்தறோம்! தெருவுக்கு தெரு போராட்டம்! வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் தீ வைப்பு, வீட்ட இடிக்கறோம், உண்ணாவிரதமிருக்கறோம், அலகாபாத்ல தீர்ப்பு சொல்ல வைக்கிறோம்.....ஓகேவா! அப்பிடியே டிரஸ்ஸ அவாய்ட் பண்ணிட்டு இலை தழையெல்லாம் கட்டிக்கிறோம்! பிரமாதம்ல!
தக்காளி இது ஒரு நாகரீகமடைஞ்ச நாடு, நகரம், பண்பாடு மிக்கதொரு இனம்! கருமம், கண்றாவி!!!
0 comments:
Post a Comment