-
-
-
அடக்கம் - உய்க்கும்
என்றைக்கோ
எப்போதோ
யாருடனோ
நடந்த மகா சண்டையில்
அமைதி காத்து - பிறகு
சமாதானத்தில்
பேச மறுத்த
சின்ன தாத்தாவை
இப்பவரை
மற்ற தாத்தாக்கள்
மரியாதையாய்
பார்க்கிறார்கள்
_____________________________________________________________________
-
-
-
ப்ளீஸ் செக் த நம்பர்
இப்ப
ராத்திரியே
கிளம்பறேன்மா!
என்ற பாலுவின் ஃபோன்காலும்
காலைல 3 மணிக்கு
இண்டியால இருப்பேன்!
என்ற பாபுவின் போன்காலும்
பேசிய பின்
வீட்டை பூட்டிவிட்டு
ஏர்போர்ட் போகும்
திட்டத்தை
கைவிட்டாள்
ராஜூவின் அம்மா
1 comments:
முதல் கவிதை புரிஞ்சுது
ரெண்டாவது கவிதை சீரியல் மாதிரி இருக்குண்ணா, நல்லாருக்கு :)
Post a Comment