தேசப்பற்று
நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடுவதை லட்சியமாக கொண்டுள்ளவர்கும், அதை பார்த்தபடியே செத்து சிவலோகப்பதவியடைவதையே லட்சியமாக கொண்டோர்கும் என்னுடைய ஒரு டவுட்டு. தேசத்திற்காக உயிரையும் விடும் ராணுவவீரர்கள் மாதிரி இந்த கிரிக்கெட் கோடீஸ்வரர்களும் விளம்பரங்களில் தோன்றக்கூடாது என்று சட்டமிட்டால், அவனவன் கிரீன் கார்டு வாங்கீட்டு இங்க வீட்டையெல்லாம் வித்துட்டோ விட்டுட்டோ கவுண்ட்டி மேட்ச் வெளையாட வெளிநாடு கெள்ம்பீருவானுக(எல்லா பயலும் அவ்வளவு காசு வச்சிருக்கானுக)! அப்படின்னா …அவனுக நாட்டுக்காக விளையாடறானா இல்ல நீங்க நாட்டுக்காக பார்க்கறீங்களா?
பொழப்ப கெடுத்துட்டு கிரிக்கெட் பார்க்க ஆபிஸுக்கு லீவு போடறது, ஆபிஸூல டிவி, இணையம், ரேடியோவில் அல்லது போன் பண்ணி நண்பன்கிட்ட ஸ்கோர் தேடி கிரிக்கெட் பின்னாடி ஓடற ஆளுக “பொழுதுபோக்குக்குன்னு” பொய் சொல்லாதீங்க!
இனப்பற்று
நம் தமிழர்கள், அதிலும் ஏதுமறியா அப்பாவிகள் கொடூரமாக சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட போது சிலோனுக்கு போய் கிரிக்கெட் விளையாடிய பெருமைக்குறியவர்கள் நம் இந்திய அணியினர். அதை எதிர்த்து மதுரையில் ஒரு தமிழன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் புஸ்ஸாகிப்போனது. சில நூறு மைல்கள் தொலைவில் தமிழர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள குஞ்சு குளுவான்களோடு ஓடிக்கொண்டிருக்கையில் இந்த மயிரான்கள் அந்த மயிரான்களோடு கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள். உணர்வற்ற சில தமிழ்நாட்டு ஜடங்கள் அப்பவும் ‘விளையாட்டு என்பது வேறு, இனப்பற்று என்பது வேறு’ என்று வியாக்க்யானித்துவிட்டு அதிகாலை டாஸ்மாக் வாடிக்கையாளனைப் போல் கிரிக்கெட் பார்த்ததோடு மட்டுமல்லாமல் என்னிடம் ‘கிரிக்கட்ல இன்னைக்கு’ என்று தொடங்கி சாவும் வரை மறக்காத அளவு வாங்கினார்கள். அப்பவே அப்படி! இப்பதான் தமிழர்கள் சௌஜோன்யமா முள்வேலிக்குள்ளாற ஷேமமா இருக்காளோல்லியோ! நம்ம ஜென்மங்கள் மறுபடியும் பே பேன்னு பேய் மாதிரி தொடங்கிட்டாங்க! அதைப்பத்தி ஒரு பழக்கவழக்க வட்டத்தில் நான் கேக்கப் போயி, பிற்பாடு ஒரு டீ கடையில் நான் நொறுக்குத்தீனி சாப்பிடுகையில் ”ஹீ ஹீ இந்த போண்டா, சிங்க்ளவர்கள் சாப்பிடுவது. அதை நீங்கள் எப்படி சாப்பிடலாம்? என்று இரு செல்லக்குட்டி ஜோக்கடிக்க, மற்றோரு பட்டுக்குட்டி “அவரு சிங்களர்களையே தின்பதா நிணைச்சு போண்டா சாப்பிடறாரு” என்று பதிலிருக்க, ஒரே சிரிப்பு மழைதான் போங்கோ!!
இப்படி ஒரு விளையாட்டை புறக்கணிப்பதுதான் சரி என்று நான் சொல்லவில்லை! விளையாடுபவர்களையும், அந்த அமைப்பையும் புறக்கணிப்பதுதானே முறைன்னு தோன்றது! சத்தியமா எனக்கு எந்த மாதிரியும் சிங்களதேச அரசை ரெப்ரசண்ட் பண்ணுபவர்களையும் கண்கொண்டு பார்க்க விருப்பமில்லை! ராமேஸ்வர கடல்ல போடறத கொஞ்சம் தள்ளி தமிழ்நாட்டுக்குள்ள போட்டாலும் நம்ம தேச பொறம்போக்குக இதே காரணத்தை சொல்லிட்டு அங்க போய் விளையாடுவானுக! நம்ம இனமுரசுகளும் பங்கர் குழிக்குள்ளாற குந்திகிட்டு பார்ப்பாங்களோ என்னவோ!!
உணர்வுள்ள நண்பர்கள் சிலர் கூட நம்ம பயலுக சரியா கேட்ச் பிடிக்கலையேன்னு பதிவிடுவதை எங்கு போய் யாரிடம் போய் முறையிடுவது?
ஒரு 11த் மேண் டவுட்டு
மாதமானா 10 தேதிக்குள்ள சம்பளம், இல்ல கைநிறைய வியாபார வருமாணம் அல்லது தகுதிக்கு மீறி கருத்து தெரிவிக்க களம் இருந்தா நானும் கூட ‘ஏய், என்னா சும்மா சும்மா ஈழம் தமிழருன்னு கூவிட்டுக்கற! எனுக்கும் எத்தினி ஃபீலிங்ஸ் தெர்மா? வேட்டைக்காரன் ரிலிசப்ப அதப்பத்தி பேசு, சிங்கம் வர்றப்ப அதப்பத்தி பேசு! சம்பந்த்மில்லாம் உளர்ற! 50ஆயிரம் பேர்தானே செத்தாங்க! இன்னும் ஒரு லட்சம் பேரு சாவட்டும், அப்பால பாத்துக்கலாம்! என்னுவோ இவனுக்குதான் பெருசு மாதிரி”ன்னு கோவப்படுவேனோ! நல்லவேளை நான் அந்த நிலையில் இல்லை!
தலைவா
உலகின் எந்த மூலையிலிருந்தாலும் உலகத் தமிழ் மாநாட்டுக்கு வரவேண்டுனு அறைகூவலிட்ட தலைவா!
ஏதும் விசேஷமுண்டா?
மூத்த மகன்வழிப்பேத்திக்கு பதில் மேடையில் தகுதியுள்ள தமிழ் கவிஞருக்கு வாய்ப்பளிக்கப்போகிறீர்களா?
ஜால்ராவுக்கு மட்டுமே வாய் திறக்கும் பக்கட்டையும், கள்ளிக்காட்டதிபரையும் பார்வையாளர் பகுதியோடு நிறுத்தப்போகிறீர்களா?
ஆங்கில வழியில் கல்வி கற்ற பணக்காரகளும் பரம்பரை படிப்பாளிகளும் அரசுதவிக்கல்லூரியில் குறைந்த கட்டணத்தில் படிக்கையில், அரசு ப்ள்ளியில், தமிழ்வழியில் படித்ததால், ஏழைப் பிள்ளைகள் நிலத்தையும் வீட்டையும் விற்று தனியார் கல்லூரியில் ஏராள டொனேசன் கொடுத்து படிக்கும் நிலைக்கு மாற்று ஏதேனும் அறிவித்து தமிழ்வழி கல்வியை தரம் உயர்த்தப்போகிறீர்களா?
அல்லது….. ஒரு மாற்றுக்கு
அரசு விழவுல நம்ம குஷ்புவுக்கு வழங்கின மாதிரி, கலைஞர் தொலைக்காட்சியின் ரேட்டிங்கை உயர்த்திய தள தள தங்கத் தமிழழகி நமீதா மச்சானை தமிழ் மாநாட்டு தொகுப்பாளரா பணியாட்ட அழைக்கப்போகிறீர்களா? ( ஒரு உப டவுட்டு: இதுக்கு முன்னாடி குஷ்புவோட தமிழ் உச்சரிப்பு உங்க கலையார்வக் கும்பலுக்கு தெரியாதா? இல்ல இதுக்கு முன்னாடி சந்தித்த போதெல்லாம் பேச்சு மட்டும் இல்லையோ!!)