Friday, July 31, 2009

குருதி வற்றாத இரணங்கள்!


அன்பிற்கினியவர்களே,


ஒரு வாரமாக, முந்தைய தொடர்ச்சியாக எண்ணங்கள் மறுபடியும் வேர் பிடித்து, எரியீட்டிகளாகவும், எகிறும் பந்துகளாகவும் ஆர்ப்பரித்து, மேலெழும்பி, மோதி, பின் நுரைதழும்ப கடலுக்குள் போகும் அலைகள் மாதிரி இல்லாமல், தொடர்ந்து அடித்து அடித்து மனதை சின்னச் சின்ன சில்லுகளாக பெயர்த்துக் கொண்டிருக்கின்றன! எப்படி ஒரு மரணம் மாற்று எண்ணத்தாலோ அல்லது காலம் தரும் மறதியால் மட்டுமே ஈடுசெய்ய முடியுமோ, அப்படித்தான் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் அளவுகடந்து ரசித்து, நேசித்து, பருகி, மயங்கி வேட்டியவிழ்வது தெரியாமல் தள்ளாட்டத்தை சமாளிக்கவே போராடுவது மாதிரி ஹிட் கவுண்டர்களையும், விருதுகளையும் கைமுழுக்க வைத்துள்ள கோலிகளை கண்கள் விரிய எண்ணும் சிறுவன் அளவுக்கு மகிழ்ந்து முடித்துவிட்டேன்.


சட்டென விழிப்பு வந்தவன் மாதிரி, எதிர்திசை வாகனங்களின் வேகத்தை இத்தனை நாள் என் நகர்வாக எண்ணியது காட்சிப்பிழையென்றபடியென உணர்ந்து, படபடத்து மறுபடி அடங்கிப் போய்விடுகிறேன். காடும் மலையும் நூறு நூறு ஆண்டுகளாய் சாட்சி நிற்பதில் பயனுண்டு. மணிதப்பிறவியின் ஆயுட்காலத்தையும் அதுபோலவே கழிப்பதில் என்ன பயன் என்கிற ஆதாரக்கேள்விகள் செயல்முடக்கிப் போட்டுள்ளன. திசையும் வழியும் அறியாத குருட்டு ஊமையின் ஆராய்ச்சிப் பயணமாய் இங்கிலீஷில் ஒரு ப்ளாக், சபா நாடக ஒத்திகை என என் பாதைகளை முன்னோக்கி நகர்த்தும் முயற்சிகளை கைகொள்கிறேன்! மறுபடியும் விழிப்பு, குழப்பம்!


மேற்பரப்பில் பயணம் தொடர்கிறது, ஆழத்தில் முடித்துக்கொண்டபடி! நடுநிசி கழிந்து விடிவெள்ளிக்கும் முந்தைய ஜாமத்திலேயே, எதிர் வீட்டு முகப்பு மரத்திலிருந்து ஒற்றையாய் கூவத்தொடங்கிய குயில் தந்த ஆச்சர்யங்களை நிறைத்தபடி செல்வேந்திரனின் புதிய பதிவை தேடிப்போகிறேன், படித்தவுடன் தூங்கப்போகும் திட்டத்தோடு!

கருத்துக்களோடு நான் முரண்பட்டாலும், செல்வேந்திரன் எழுத்துக்களோடு உடன்படும் இயல்பெனக்கு! தொலைப்பேச்சோ நேர்பேச்சோ, எப்படிப் பேசினாலும் 10 வருடங்களை குறைத்து வயதை பின்னோக்கி இழுத்துப்போகும் இளைஞன், நேரடியாகச் சொல்லாமல் தனக்கு வந்த, தான் அனுப்பிய வலிமிகுந்த மின்னஞ்சல் நகல்களால் வருத்தப்பட்டிருந்த பதிவு அது. சிங்களத்து க்ளஸ்டர் குண்டுகளுக்கு இரையான பல்லாயிரம் தமிழ் உயிர்களோடு ஒரு பால்யத்து பேனா நட்பும் பலியாயிருந்தது. நீண்ட பிண்ணூட்டங்களை பதிவுலகம் ஆதரிப்பதில்லை என்கிற காரணத்தால் பதிவாகவே ஒரு பதிலிருக்கிறேன், அந்த குயிலும் தூங்கிப்போன விடிகாலையில்!


வணக்கம் செல்வா, உங்கள் வலி புரிகிறது எனினும் இதற்கு மேல் (எந்த விவரமும் தெரியாமல்) உங்கள் சொந்த விஷயம் பேசமுடியாது. ஆனால்...

அங்கே இலங்கையில் போராக நிகழ்ந்த போதும், இனப்படுகொலையாக முடிவுற்ற போதும், இப்போது எல்லாமே கைமீறி போனபின்னரும், தமிழ்நாட்டு தமிழர்களாகிய நாம் வினைத்தொகை மாதிரி வருத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறோமே தவிர, யழவு எதையும் செய்யமுடியலையே! சமீப நாட்களாய் மனதை அறுத்துக்கொண்டிருக்கும்; எனக்கு நான் கேட்டுக்கொள்ளும் கேள்வியை உங்களோடு பகிர்ந்து கொள்ள தூண்டுகிறது உங்கள் பதிவு! தவிர யாரை யார் கேள்வி கேக்க முடியும்? இல்லையா.... கேட்ட கையோட முத்துகுமார் மாதிரி போயிட்டேயிருக்கனும்! இருந்து கண்டு சகிக்க முடியல தோழா!


ஒன்னுமே செய்ய முடியாம போச்சே.....அங்கிருந்து அவங்களும் அதத்தானே கேக்கறாங்க! ’தண்ணிர் தண்ணிர்’ படத்துல பிரச்சனைக்காக போராடும் முடிவெடுத்தபின் “உசிரென்ன அத்தன வெல்லக்கட்டியோ” என்பதாய் ஒரு கிழட்டுக்குரல் ஒலிக்கும். நமக்கெல்லாம் அந்த உசிரு வெல்லக்கட்டியினும் மேலாகப்போய்விட்டது! உடனே உசிருக்கு உசிருதான் பதிலா? முத்துக்குமாரும் இன்ன பிறரும் செய்தது தவறுன்னு ஆரம்பிச்சிருவாங்க! விடுங்கையா, என் நண்பன்கிட்ட அழுதுட்டு போறேன், வெலகுங்க! நல்ல நினைவு தெரிந்த நாள் முதல் இலங்கைனாலே தமிழன அடிக்கிறாங்க, கொல்றாங்கன்னு காதுல கேட்டு கேட்டு மன்சே மறத்துப்போச்சோ? முக்கியமான சீன்ல ஃபெர்பார்மன்ஸ் பார்த்து அழற மாதிரியில்ல தற்காலிகமா துக்கம் வருது! அகநானூறு, புறநானூறு பத்தி இங்கிலீஷ் மீடியம் படிக்கிற பசங்களுக்கு தமிழ் செகண்ட் பேப்பர்ல வர்ற ரொம்ப கஷ்டமான ஒரு மார்க் கேள்விகள் மாதிரி, தமிழர் வரலாறுகள் சொல்லும் வீரமும் நமக்கு நினைவுலயே இல்லையோ என்னமோ?

எல்லார்த்துக்கும் இதே நிலைதான், அது நிச்சயம்! ஆமாங்க, ராமேஸ்வரத்து கடல்ல நம்ம தமிழநாட்டு தமிழர்களை அடிச்சாலும் நமக்கு வலிக்க மாட்டேங்குது! அதுக்கெல்லாம் நாம யாரும் காரணம்கூட கேக்கறதில்லை. ஏதோ இராமேஸ்வரத்து லா அண்ட் ஆர்டர் பிரச்சணை மாதிரியில்ல விஷயம் போகுது! வேனுன்னா பாருங்க, அப்பிடியே உள்ள வந்து, மதுரைல அடிச்சாலும், டிவில லைவ்தான் பார்க்க போறோம்! இல்ல இந்த பக்கமா சுத்தி வந்து சென்னைல எங்களையெல்லாம் ஒரு காட்டு காட்டினாலும் கோயமுத்தூர்ல துடிச்சு எழுந்திரபோறீங்களா? அப்பவும் நமக்கான ஒரு அரசியல் காரணம் இல்லாமலா போயிடும்? அப்பிடி ஒருவேளை நடந்தா நம்ம சொந்த ஊர்ல ஒரு நண்பன் எப்படி கோவிச்சுக்குவானோ, அப்பிடித்தான் உங்க நண்பர்களும் கோவிச்சிட்டாங்க போல! எனக்கே இப்பிடி யாரோ கேள்வி கேக்கற மாதிரியும், உன் மூஞ்சிலயே முழிக்க மாட்டேன்னு சொல்லிட்ட மாதிரியுஇந்தான் கடந்த ரண்டு மாசமா ஒரு நினைப்பு! ஒரு வேளை உங்க நண்பர்களோட பதில் உங்களை காயப்படுத்திருந்தா, இதேமாதிரி காயங்களோட உங்களை சுத்தி பல பேரு எந்திரன் ரிலீஸ் பத்தியோ, இடைத்தேர்தல்லயும் காசு தருவாங்களாங்கறத பத்தியும் சும்மா பேசிட்டிருக்கோம்னு நினைச்சிக்கங்க! இன்னும் சொல்லப்போனா நீங்க மனசு விட்டு சொல்லீட்டீங்க! ஆனா என்னை மாதிரி ஆளுக அதைய சொன்னம்னா, எவன் எப்பிடி திட்டுவான், இல்ல என்ன பாலிடிக்ஸ் பேசுவான்னு ஊமைக மாதிரி திரியறம் பாருங்க...ரொம்ப கஷ்டம்!!

எனக்கென்னவோ போர் மறுபடியும் வரும்னு தோனுது! அது அவங்களுக்கு விடிவோ இல்லையோ, இங்க குமுறிட்டிருக்கறவனுக்கு ஒரு வாய்ப்புன்னுதான் நினைக்கிறேன்! எத்தனையோ முறை இங்க மூலை முடுக்குலருக்கற கிராமங்கள்ருந்து பொருட்கள் போயிருக்குதாமா, நாம மனசு வச்சா போக மாட்டமா? என்க்கென்னவோ இனி நடந்தா அப்பிடித்தான் நடக்கும்னு தோனுதுங்க! அப்பிடி ஒரு படை அணிவகுத்து கிளம்பிச்சுன்னா, ஒருத்தனுக்கொருத்தன் சொல்லாம, வாதம் பண்ணாம எந்த வரிசைல யார் இருப்பம்னு சொல்லமுடியது! ஆனா இருப்போம்!!

செல்வேந்திரனின் பதிவு: சொற்களெடுத்து எறிந்தாய் தோழி!

Thursday, July 30, 2009

50வது பதிவில் ஒரு அறிவிப்பு


























எல்லோர்க்கும் வணக்கம்,

இது எனக்கு 50வது பதிவு. நிணைத்துக்கூட பார்க்கவில்லை நான் இவ்வளவு தூரம் பயணம் செய்வேன் என்று. என் நண்பர்கள் தந்த உற்சாகம், மற்றும் ப்ளாக்கில் பரிட்சையமான எண்ணற்ற பல புதிய நண்பர்கள் கொடுத்த அங்கீகாரத்தால் மட்டுமே் என்னால் 50 பதிவு வரை சாத்தியப்பட்டிருக்கிறது.

இந்த வேளையில் என் அடிப்படை இயல்புகளான் விளம்பரப்படங்கள், புகைப்படங்கள் மற்றும் கிராஃபிக்ஸ் டிசைன் ஆகிய திறன்களை வெளிப்படுத்தும் விதமாக http://tmpcreativiews.blogspot.com/ என்ற ஒரு ஆங்கில ப்ளாக்கை தொடங்கியுள்ளேன்.





























கூகுள் ஆட்சென்ஸ் தொடங்கி இன்னபிற வியாபார சாத்தியங்களுக்காகவே இந்த ஆங்கில முயற்சி! இதன் பொருட்டு எனக்கு ஏதேனும் வழிமுறைகள் / அறிவுரைகள் அளிப்பீர்களெனில் உதவியாக இருக்கும்.

Monday, July 27, 2009

மூன்றில் ஒரு ஆண் - மூன்றில் ஒரு பெண் மற்றும் உதவாக்கரை பையன்கள்






சமீப காலமாக தொலைக்காட்சிகளில் இரண்டு விதமான ஹார்லிக்ஸ் விளம்பரங்கள் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

1. உலகில் மூன்றில் ஒரு ஆண் மிகவும் தொம்மனாகிக்கொண்டிருக்கிறான், அவனை சராசரியாக்க ஹார்லிக்ஸ் லைட் குடியுங்கள்

2.Osteoporosis என்கிற உடல்நலக்குறைவால் உலகில் மூன்றில் ஒரு பெண் நோயளியாகிகொண்டிருக்கிறாள். அதை சரிப்படுத்த இதை குடியுங்கள்

மேம்போக்காக பார்த்தால் விளம்பரம் அழகாகயிருக்கிறது, ஆனால் சமாச்சாரம் சமூகரீதியாக, இந்தியா மாதிரியான மூன்றாம் உலக்நாட்டின் மிகப்பெரும் பிரச்சணையல்லவா! அடங்கொக்கமக்கா!

மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் மூணு வேலை சோத்துக்கே சிரமப்படுவதாக படித்த ஞாபகம், இதில இது எப்படிங்க என்று நான் வியந்த போது என் உளவியல் மருத்துவ நண்பர் ஆப் தி ரெக்கார்ட் தகவல் சொன்னார், அதாவது 'அமெரிக்காவில் அதிகமாக குறும்பு செய்யும் பொடியன்களை கட்டுப்படுத்த ஹார்லிக்ஸ் குடிக்கப் பழக்குவார்களாம், குடித்துப் பழக்கமாகும் குழந்தை சாதுவாகி விடுமாம்(பழம்)!

அது சரி, அமெரிக்கா எப்படிவேனா இருக்கலாம்! அட என் இந்திய அரசாங்கமே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? மக்கள் தொகையில் அதிகம்பேர் ஏழைகளாக இருக்கும் நாட்டில் எல்லோரும் ஹார்லிக்ஸ் வாங்கிக்குடிப்பது சாத்தியமா? என்ன மாதிரியான விழிப்புணர்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது? மருத்துவரீதியாக என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது? முதல்வர் காப்பீட்டு திட்டத்துல இதுக்கு ஏதாவது மேட்டர் இருக்கா? அடேய், அடீய் எதாவது சொல்லுங்கப்பா!
---------------------


நாடோடிகள் படம் பார்த்தேன். ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல சினிமா பார்த்த திருப்தி! சில கேள்விகளுக்கு மேலோட்டமாகவும், அவற்றால் உருவாகும் பல கிளைக்கேள்விகளுக்கு மறைமுகமாகவும் பதில் கண்டுபிடிக்க உதவியிருக்கிறார் இயக்குனர் சமுத்திரகனி.

எனக்கு மனதில் உதித்த Moral of the story " எல்லாகாலத்திலும் படத்தின் நாயகன் மாதிரியான இளைஞர்கள் தங்களின் பெரும் சக்தியை, இளமையை பயனேயில்லாத விஷயங்களில் ஆர்வமாக செலவிடுகிறார்கள்! அல்லது உப்பு பொறாத விஷயத்துக்கு உணர்ச்சிவசப்பட்டு உயிரைவிடவும் தயாராக உள்ளார்கள்! குறிப்பாக தன் குடும்பத்துக்கு பிரயோஜனமில்லாத ஒரு உயிரினமாகவே வாழ்கிறார்கள். தன் பொருட்டு செத்துப்போன பாட்டி, மான மரியாதையிழந்த அப்பா, துரோகம் செய்து தாடி வளர்க்க காரனமாகிய பின் காதலி ஆகியோரிடம் மிகவும் அக்கறையாகயிருக்கிறார்கள்!" ஆனால் அவர்களாகவே சுயமாக குடும்பத்துக்கு எதுவும் செய்ய முன்வரும் உத்தேசமில்லை!.

மேற்படி சமாச்சாரம் புரியாமல் போய் நாயகனை எவரும் முன்மாதிரியாகக் கொண்டு விடுவார்களோ என்கிற முன்னெச்சரிக்கையில் மிகத்தெளிவாக காட்சிகளை அமைத்துல்ளார் இயக்குனர் சமுத்திரகனி. குறிப்பாக படத்தின் முத்தாய்ப்பாக நாயகனை அவன் முட்டாள்தனத்தால் ஊனமாகிப்போன நண்பர்களுடன், அவர்களுக்கு எந்தவித்திலும் சம்பந்தமில்லாத ஒரு செயலில், காதலுக்கு உதவி என்று அவர்களாகவே அர்த்தப்படுத்திக்கொண்டு மடையர்கள் மாதிரி கெக்கேபிக்கே என கிளம்பிப்போவதாய் காட்டி முடித்திருக்கிறார்!

எனக்கென்னவோ இயக்குனர் சமுத்திரகனி இந்த விஷயத்தை மேல்நோக்கி ஓடும் ஸ்க்ரோலிங் டைட்டிலில் அவர் குரலிலேயே சொல்லியிருக்கலாம். ஏனென்றால் இந்த தெளிவான் கடைசி காட்சியை பார்த்த்பின்பும் பல உதவாக்கரைகள், தாடி வளர்த்துக்கொண்டு, உயிரைக்கொடுத்தாவது அர்த்தங்கெட்ட காதலுக்கும் உதவுவதே ஒரு தமிழ் இளைஞனின் கடமை என கருதிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்!

நுட்பமான திரைக்கதை அமைப்பு, வசனமாகயில்லாமல் காட்சிகளில் கதை சொலியிருக்கும் தெளிவு, சினிமா மற்றும் தன் தொ. தொடர் அனுபவங்களை அற்புதமாக பயன்படுத்திக்கொண்டிருப்பது என இயக்குனர் சமுத்திரகணி அவர்களே "உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு"

Friday, July 24, 2009

சிலோன் ராசுகுட்டிய ஒரு நடை பார்க்க போலாம் வாறீங்களா?



இலங்கையில் அதிபராக வேலை செய்யும் ராஜபக்‌ஷேவை, ஊர்பக்கத்துக்காரராக இருந்தால் ராஜூ என்கிற ராசுகுட்டி என்றுதான் அழைப்போம். நானும் இனி அதுபோலவே ராசுகுட்டி என்றே அழைப்பதாக உள்ளேன்.

பின்ன சும்மாவா, எவ்வளவு கெட்டிக்கார புள்ளையாகயிருந்தால் ஒரு இன மீட்பு விடுதலை இயக்கத்தை தீவிரவாத குழுவாக பல நாடுகளில் தடை செய்யவைத்து, அந்த இனம் ஒரு மாநிலமாக வாழும் நம்ம நாட்டுலருந்தே ராடாரிலிருந்து துப்பாக்கி, கொல்லுவெடி என எல்லாம் வாங்கி, நாம பாக்க பாக்க, நம்ம கண்ணு முன்னால(அதான் கண்ணால டிவில பார்த்தம்லோ) நெஞ்சும் குடல் அஞ்சாம மொத்த வீரர்களையும் கொண்ணு தள்ளீட்டு, எல்லா மக்களையும் அகதி முகாம்ல அடைச்சு நம்ம இந்தியாவயே ஐ.நாவுல ஆதரவு ஓட்டு போட வைக்கறதுன்னா ராசுகுட்டி லேசுபட்ட ஆளா?



இப்ப ராசுகுட்டி ஆளுக மறுபடியும் ராமேசுவர மீனவர்களை டுமீல் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க! டவுட் என்னான்னா, அதுக்கும் யூஸ் பண்றது இந்தியா டுவாக்கியா இல்ல வேறயா?

ராசுகுட்டி, சிலகாலத்துக்கு முன்னால நம்ம தமிழ்நாட்டு அரசியல்வாதிகள ஒரு நடை இலங்கைக்கு வந்து தமிழர்கள் வாழ்நிலைய பார்த்துட்டு போங்கன்னு அழைப்பு வச்சாரு! மேற்படி அழைப்பு இன்னும் உசுரோட இருக்கா இல்ல காலாவதி ஆயிடுச்சா? ஒரு வேளை நம்ம ஆளுகளுக்கு டிவி கொடுக்கறது, ஸ்டவ்வு கொடுக்கறது, கார்டன்ல வாஸ்துபடி வீடு கட்டறது, தோட்டத்துல மாமரம் நடறதுங்கற மாதிரி பிஸியா இருக்கறாங்கண்ணு வச்சிக்கங்க. அதுக்கு பதிலா, இனிய த்மிழ் மக்களே, பிரியப்படறவங்கல்லாம் இலங்கைக்கு போயிட்டு வாங்க, பயணச்செலவு, சாப்பாடு, தங்குமிடம் ஃப்ரி, கூடுதலா பிரியப்படறவங்க தமிழர்கள் முகாம்ல கூட தங்கீட்டு வரலாமுன்னு சொன்னாங்கன்னா நாமெல்லாம் போலாமா? வர்றவங்க கைய தூக்குங்க!





இப்ப அங்க பயமே கெடையாது! முக்காவாசி பேர கொன்னாச்சு, மீதி இருக்கற இத்துனூண்டு பேரும் காட்டுகுள்ள பதுங்கி திரியறாங்களாமாங்க! ஸ்விஸ் பேங்க்ல இருக்கற பணத்துக்கு அயல்நாட்டுல இருக்கற போராளிக அடிச்சிக்கறாங்களாமாங்க! அதுனால ஒரு முதுமலை காடு உள்பகுதி, ஊட்டி காட்டுப்பகுதி, கொடைக்கானல் மலைல குணா கேவ்ஸ், டாப்ஸ்லிப் பைசன் ஹவுஸ் அந்த மாதிரியெல்லாம் ஒரு திரில்லா தமிழர் டெண்ட்டுகள்ல ஜாலியா தங்கீட்டு, செல்போன் கேமராவுல போட்டோ எடுத்துட்டு, சோத்துக்கு க்யுவுல நிக்கற குழந்தைகள் பத்தி அப்பிடியே அழுகறமாதிரி கவிதை எழுதிட்டு, இளவட்ட பசங்ககிட்ட “நீங்க புலியான்னு” நைசா கேட்டுட்டு, பொட்டைபுள்ளைகள பார்த்து பரிதாபபட்டுட்டு........., அடடா, அடடா! எத்தன நல்லருக்கும்னு நினைக்கிறேன்!







போயிட்டுதான் வந்தரலாம் வாங்க! ஏனுங்க, அவுங்க உசிர கைல புடிச்சிட்டு ஓடறதையும், ப்ஃங்கர் குழில பதுங்கறதையும், பள்ளிக்கூட யூனிபாஃர்ம்ல பொணமா கொழந்தைகள வரிசையா படுக்க வச்சிருந்ததையும் ஜூ.வில, கு.ரில, தினமலர்ல, NDTV, BBC மற்றும் இன்ன பிற டிவிலயும், அது முடியாதவங்க நம்ம சதக் சதக் தினதந்திலயும் பார்த்துட்டு ஆபீஸ் போறதுக்கு முன்னாடி வூட்லயும், டீ கடைல முகம் தெரியாதவங்ககிட்டயும், ப்ரண்ட்ஸோட போன்லயும் மணிரத்தனத்தோட கண்ணத்தில் முத்தமிட்டால் பார்த்தப்போ எப்படியெல்லாம் பரிதாபபட்டமே, அதே மாதிரியே உச் உச் உச்சுனு பாவப்பட்டமே! நமக்கு அது போதுங்களா...? நேருல போயி பலத்த பாதுகாப்போட பாத்துபோட்டே வந்தரலாமுங்க! முடிஞ்சா... கொஞ்சம் டிரை பண்ணுனம்னா பிரபாகரனோட அப்பா அம்மாவகூட ராசுகுட்டிகிட்ட பர்மிஷன் கேட்டு பாத்துட்டு, மறக்காம போட்டோ எடுத்துட்டு வந்தரலாம். ஒரு விஷயம் நாம மறக்கவே கூடாதுங்க! நம்ம ராசுகுட்டி சொல்லிகுடுக்கலேன்னா நமக்கெல்லாம் கிளஸ்டர் குண்டு பத்தி எதாவது தெரியப்போகுதுங்களா!





அப்புறம் பார்த்தீங்கன்னா இதுல சில தொழில்ரீதியான லாபம்கூட இருக்கு! ஏன்னா சிலோன் ஃப்ரி போஃர்ட்டு - வரிகள் கம்மி! இப்பங்கூட நம்ம முதல்வர சிலோன் பிரச்சனைக்கு கண்டபடி திட்டற வகையற ஆளுக இலங்கைல பிஸினஸ் ஆழம் பார்க்க தொடங்கிட்டாங்க! நாமளும் போலாம்...... நம்ம நாடு கண்டிசனா சுதந்திரம் கிடைச்சிரும்னு தெரிஞ்சவுடனே 1930கள்ல பல வசதி பார்ட்டிக காங்கிரஸ்குள்ள வந்து கப்பலோட்டிய தமிழன் வா.வு.சி, தந்தை பெரியார் மாதிரி பொழைக்க தெரியாத ஆளுகளையெல்லாம் விரட்டிவுட்டாங்கள்ளோ! அந்த மாதிரி நாமளும் வழிவகையுண்டான்னு பார்கலாம்! முக்கியமா சீரமைப்புக்காக இலங்கை அரசுக்கு உலகவங்கி உட்பட பலநாடுகள் காசு குடுக்குது! வாங்க நாமளும் டெண்டர் அனுப்பலாம்!





செண்ட்டு, துணிமணியெல்லாம் வெலை கமியா கிடைச்சாலும் கிடைக்கும், வாங்கிக்கலாம்! போயிட்டு வரலாமா? சினிமாவுக்கு லொக்கேஷன் பாக்கலாம்! சிலோன் டிவில சீரியல் ஸ்லாட் கேக்கலாம்! காய்கறி எக்ஸ்போர்ட்க்கு சிலோன்ல இப்ப நல்ல மார்கெட்டுன்னு சொல்றாங்க! என்ன பாக்கறீங்க? அதெல்லம் முடியாது, பர்மிஷனெல்லாம் கிடையாது அப்பிடின்னு ஒருவேளை நம்மாளுக லொல்லு பண்ணுனாங்கன்னா, அவுங்க டைப்புலயே நாமெல்லாரும் சேர்ந்து லொல்லு பண்ணலாம்! ஆமா அவுங்க மத்திய அரசுக்கு அனுப்புனாங்க, நாம நம்ம மாநில அரசுக்கு லட்சக்கணக்குல தந்தி அனுப்பிச்சு எங்களை அரசு செலவுல இலங்கை அனுப்பி வைங்கன்னு கேக்கலாம்? அனுப்பாம உட்டுருவாங்களா என்ன?

ஏன்னா, இந்த வாரம் வந்த சினிமா எதுவும் அத்தன நல்லால்ல! வேட்டைக்காரன், எந்திரனெல்லம் லேட்டாகும்னு நினைக்கிறேன்! சீரியலும் இழு இழுன்னு இழுக்கறாங்க! இதை மட்டும் செஞ்சு போட்டம்னா, நாம் பத்திரமா திரும்பி வந்தபிறகு எல்லா டிவிகாரங்களும் பேட்டி எடுப்பாங்க! பத்திரிக்கைகள்ல நம்ம போட்டாவோட கவர் ஸ்டோரி, ஏன் தொடரே எழுதலாம்! உண்மைக்கதைன்னு ஒரு சினிமா உத்தரவாதமா எடுப்பாங்க! வாங்க சிலோன்ல போயி நம்ம ராசுகுட்டிய ஒரு நடை பார்த்திட்டு வந்தரலாம்!!!





குறிப்பு
இந்த பதிவு,
இன்னும் ஆறாத என் ஆகப்பெரும் வேதனையின் வெளிப்பாடு!
என் சக உணர்வாளனுடனான விழிப்பூட்டலும்,
தோள் பற்றி கண்ணீர் பகிர்தலுமே என் நோக்கம்!
ஒருவேளை
கோபமோ, காயமோ படுவிராயின்.....!
தோழரே,
இது
உம்மைக் குறித்த / உமக்கான
பதிவன்று!

Wednesday, July 22, 2009

விருதும், கிரீடமும் பின்னே ஒரு ”குட்டி” பதிவும்....


நண்பர், சக பதிவர் திரு. ஜெகநாதன்(காலடி) எனக்கு இன்று மேல்காணும் விருதினை அளித்துள்ளார். எந்தவித முன் அறிமுகமும் இன்றி ப்ளாக் நண்பராக கடந்த சில மாதங்களாக அறிமுகம். என் சிந்தனி தொடர்ந்து உயிர்வாழும் காரணிகளில் இவரும் ஒருவர். இந்த விருதை தருவதன் மூலம் எனக்கு மேலும் உற்சாகத்தை வழங்கியுள்ள ஜெகநாதன் அவர்களுக்கு நன்றி.

எனக்கு இந்த வாரம் கிரீடம் வழங்கிய தமிழ்10 திரட்டிக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்10ல் நான் கவணிக்கப்படுகிறேன் என்பதே ஒரு நல்ல மனநிலையை உருவாக்குகிறது. தொடர் உற்சாகம் தரும் ஏனைய நண்பர்களுக்கும் என் நன்றிகள்!

திரு ஜெகநாதன் எனக்கு அளித்துள்ள இந்த விருது ஒரு தொடர்பதிவு விருதுச் சுற்று. ​விருது பெற்றவர், மேலும் 6 பேருக்கு விருதை வழங்கவேண்டும்.​ அதற்கான தகுதி விகிதங்களை நான் அறியேன். கூடவே கொஞ்சம் மலைப்பாக இருப்பது போல் உணர்கிறேன். எனவே இவ்விருதினை தொடங்கி வைத்த அந்த நற்சிந்தனையாளரும், நண்பர் ஜெகநாதனும் எனக்கு இரண்டு நாள் அவகாசம் தரவேணுமாய் கேட்டுக்கொள்கிறேன்!

இது ஒரு பதிவு என்கிற கணக்கில் வராது, என்றாலும் சாத்தியப்படுமாயின் இதுகாறும் என் கிறுக்கல்களின் மொத்த விமர்சனமாய் ஒரு பின்னூட்டமிடுவீர்களெனில் என்னை மேம்படுத்தவும் திருத்திக்கொள்ளவும் உதவும். தொடர்வது ஒரு “குட்டி” பதிவு

தமிழ் குட்டிகள்

ட்ப்பிங், சொந்தக்குரல் போன்ற விவரங்கள் தெரியாமல் முதன் முதலாய் சினிமாவுக்குள் உதவி இயக்குனனாய் நுழைந்தது முதல், இப்போவரைக்கும் புரியாத ஒரு விஷயம். தமிழ் சினிமாவில் ஏன் தமிழ் பெண்கள் நாயகிகளாக நடிப்பதில்லை? ஒரு மலையாளப் படவிழாவை சூர்யாவிலோ, ஏசியாநெட்டிலோ பாருங்கள். மேடை முழுக்க ஒரே மாதிரி முகங்கள், உடைகள்! நிகழ்ச்சி நடப்பது கேரளாவில்தான்னு தெளிவாத்தெரியும்! இங்கத்த கோளாறுதான் நமக்கு தெரியுமே! சாம்பார், ரசம், தயிறு, பொறீயல்னு எல்லாத்தையும் ஒன்னா போட்டு காலை விட்டு கலக்க்னமாதிரி ஒரு கலவை தரிசனம் தருவாங்க பாருங்க! யாரு சேலைல வருவா, யாரு குட்டை பாவாடைல வருவான்னு டிவி முன்னாடி காத்துக் கிடக்கிற சொகம் இருக்கே..... பேதி புடுங்கனா மாதிரியே இருக்கும்! ஒரு தமிழ் சினிமா விழாவுக்கு அதுவும் வேஷ்டி கட்டிட்டு முதல்வர் வர்ற விழாவுக்கு குளியலறைலிருந்து வர்ற மாதிரியே வந்தது மட்டுமில்லாம் “ஐய்யயோ என்கு தெரியாது”ன்னு ஒரு பதில்! அப்படின்ன என்னா உத்தேசத்துல அப்பிடி ஒரு துணிய போட்டுட்டு பொது விழவுக்கு வராங்க? தயார், ஏலத்தொகைய அறிவிக்கலாமுங்கற மாதிரியில்லயிருக்கு!

என் அறிவுக்கெட்டியவரையில் நிறைய தமிழ் பெண்கள் சினிமாவை முயற்சித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் பல இயக்குனர்கள் தங்கள் பேட்டிகளில் தமிழ் பெண்கள் நடிக்க வருவதில்லை என் சொல்கிறார்கள். ஆனால் அடையாறு பகுதியிலிருந்து மிஸ்.சென்னையாக பட்டம் சூட்டப்பட்டு ஒரு திரிஷா நடிகையாக வருகிறார், அவரும் காசுக்கேத்த பணியாரமாய் தெலுங்கில்தான் திறக்கதொடங்கி தமிழிலும் அந்தளவுக்கு கொடுத்தால் தொடர்கிறார். மற்றபடி நம் தமிழ் சினிமாவில் நடிக்க கேரளாவிலிருந்து பிடித்து வந்தல்தான் உண்டு, அது தமிழச்சியான அபிராமியாக இருந்தால்கூட!

தமிழ்ல பாடறதுக்கே ஆளில்லையாமாங்க!, ஆனா ஒரு அனுராதா ஸ்ரீராம் வாரார், சீனிவாசன் வாறார், கிருஷ் வாறார், நரேஷ் ஐயர் வாரார்! இவர் அவரில்லைனு தெரிஞ்சவுடனே ஹரீஷ் ராகவேந்தர் பாடறதே குறைஞ்சுட்ட மாதிரி தெரியுது! என்னா கொடுமை சரவணன் இதுன்னு ஜோக் அடிச்சு சிரிக்க முடியலைங்க! டவுசர் பையிலிருந்து போறது நம்ம காசு, தட்டிபறிக்கப் படறது நம்ம உரிமை!

ஜூனியர் ஆர்டிஸ்ட்ஸ், ரிச் கேர்ள்ஸ்ல் நான் நிறையத் தமிழ் பெண்களை பார்த்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலானோர் நாயகிகளாக நடிக்க வந்தவர்கள்தான். ஆனால் அவர்களுக்கு வைக்கப்பட்டுள்ள செக் என்னவென்றால், கதநாயகியாகும் பட்சத்தில் தினசரி கிடைக்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட்ஸ்/ரிச் கேர்ள்ஸ் வேலை போய்விடும்! நடித்த படம் ஓடி ஜெயிக்கும் வரை வருமான உத்திரவாதமில்லை. லாக் பண்றதுன்னா இதுதான் போல!

எங்காவது ஷூட்டிங் நடந்தால் போய் பாருங்கள் ப்ரொடக்‌ஷன் எனப்படும் சாப்பாடு போடும் துறையை கவணியுங்கள். உணவு பரிமாறூவது இல்லாவிட்டாலும், பாத்திரம் துலக்குவது பெரும்பாலும் நம் தமிழ் பெண்கள்தான். ஏன் அது சினிமா துறையில்லையா? எனில் நடிகைகளிடம் இருக்கவேண்டிய நடிப்பு தவிர என்ன தகுதி வேற்று மொழி குட்டிகளிடம் உள்ளது?

கலைக்கு மொழியில்லை எனும் பெரும் ஜால்ராவை காது கிழிய அடிக்கதொடங்கப்போகும் தமிழர்களே, கொஞ்சம் அடங்குங்க! உங்களுக்கும் சினிமவுக்குள்ள போகமுடியாத அளவுக்கு ஆப்பு சொருகி ரொம்ப நாள் ஆச்சு! பணம் மற்றும் புகழ் வரும் சினிமா துறைகள் அணைத்துமே 90% தமிழர்களிடம் இல்லை. அதன் தொடர்ச்சியே இந்த வெள்ளைத் தோல் வெறி! அத மீறி தமிழ் சாயல்ல கறுப்பு பொண்ணுக, சாதாரண முகவெட்டுள்ள, ஆனா நல்லா நடிக்கத் தெரிஞ்ச தமிழ் நடிகர்கள போட்டு எடுத்த மாயாண்டி குடும்பத்தார் படத்துக்கு என்ன அடிப்படைல வால்மிகிய விட குறைவான மார்க் கொடுத்தாங்கண்ணு தெரியல!

அதெல்லாம் இல்ல, கிடையாது, வெள்ளைத்தோல் தமிழச்சிகளே யாரும் கிடையாது, கறுப்பிகள போட்டா யாவாரமாகாதுன்னு மறுமொழியிருக்குமாயின். அட சாம்பிராணிகளா அப்புறம் எதுக்கு இத கலைப்படைப்புன்னு சொல்லி கல்லா கட்டறீங்க? இதுவும் சதை யாவாரம்தானே?

ஒரு இயக்குனர் நண்பர் சொன்னார் “அவங்க வரும்போதே சினிமாவுக்கான விஷயங்கள தெரிஞ்சுகிட்டு வராங்க, ஆனா நம்ம தமிழ் பொண்ணுக ரொம்ப டார்ச்சர்ங்க, எல்லாம் நாம சொல்லித்தர வேண்டியதிருக்கு. காரணமில்லாமய தமிழ் தமிழ்னு பேசற நபர்கள்கூட வடக்கிருந்தோ, மலபார்லருந்தோ புடிச்சிட்டு வராங்க”!!! எனக்கு குழப்பம், அமா இவரு நடிப்ப பத்திதனே பேசறாரு?

இப்போ குட்டிகளோட குட்டன்கள் வரவும் அதிகமாயிடுச்சு! யாராவது தமிழ்நாட்டுக்குள்ளயிருந்து தமிழ் சினிமாவுக்குள்ள வரனும்னு ஆசைப்பட்டீங்கண்ணா, கதை அல்லது வசனம்ங்கற மாதிரி பிரிவுக்கு வாங்க! ஏன்னா இன்னும் கொஞ்சம் நாள்ல தமிழ்ல நடிகை,நடிகன், வில்லன், காமெடியன் யாரும் கிடையாதுன்னு சொல்லிடப்போறாங்க! மற்றபடி நம்ம ஜெயமோகன் நாயர் மாதிரி அவங்களும் தமிழ சிறப்பா கத்துகிட்டு வந்து கதை வசனத்துக்கும் ஆப்படிக்க போறாங்க! தயாரிப்பாளர் முதலாளிங்களும் அவங்களுக்கு உருவும் ஒரு தமிழ் துரோக இனமும் அதுக்கு பெரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனா என் இனிய தமிழ் மக்களே, காசு கொடுத்து , ப்ளாக்ல, அட்வான்ஸ் புக்கிங்ல, இண்டர்நெட் புக்கிங்க்ல டிக்கட் வாங்கி படம் பர்க்கும் உரிமை மட்டும் உங்கள தவிர யாருக்கும் கிடையாத்து! திருட்டு டிவிடில படம் பாத்தியளோ, மக்களே, இருக்குடி குண்டர் தடுப்பு சட்டம்!

Tuesday, July 21, 2009

மும்பையில் மழை, சென்னையில் வெள்ளம்!







வரப்போகுது!

காரணம், கடந்த வாரத்தில் நம்ம ஊருல சேர்ந்த்தாப்போல ஒன்றரை மணித்தியாலம் நல்ல மழை பெய்தது. பிறகு தெருவுக்கு வந்த போது சற்றேறக்குறைய எல்லாத்தெருவுகளுமே, குறிப்பாக கடந்த வருட மழையில் படகும் பரிசலும் ஓடிய தெரு அத்தனையிலும் தண்ணீர் குளம் கட்டியிருந்தது. அந்த நிமிட சிரமம் தாண்டி மீண்டும் வர்ம் மாத்ங்களில் சாக்கடை தண்ணீரும் மழைத் தண்ணீரும் கலந்து நம்ம வீட்டுக்குள்ள எப்போ வரப்போகுதோங்கற பயம்தான் அதிகமா இருந்தது!

இந்த 10நாள்ல மும்பையில் பயங்கர மழை! போன வாரத்துல ஒரு நாள் தொடர்ந்து 7ம்ணி நேரம் மழை! கடந்த 2 நாளைக்குள்ள 17 மணி நேரம் நான்ஸ்டாப் மழை. முபை நகரம் தத்தளிக்கிறது என்கிறது ஏஜன்சி செய்திகள். ஆனாலும் தாஜுல குண்டு வச்ச அளவுக்கு ஊடகங்கள் மழைய கொண்டாடுல. மழைக்கு எங்ககிருக்குது பாதுகாப்பான தூரம்? கேமராவ வச்சிட்டு குப்புற படுத்துக்கறதுக்கு! தவிர அந்த நுனிநாக்கு இங்கிலிஷு பாப்பாக்கள் போடுற பாதாள பள்ளத்தாக்கு உடையெல்லாம் மழையில நணஞ்சா அவங்க வீட்டுல என்னவாவது சொல்லுவாங்களோ என்னமோ!

இப்ப விஷயம் அவங்க இல்ல! கடந்த 6-7 மாதமா மகன் பேரன் சண்டை, பொறவு மகன் - மகன் சண்டை, அப்பால மகன், மகன், மகள் சண்டை இதுலயே ஒரு மாநிலத்தோட மொத்த நிர்வாகமும் சீரழிஞ்சா..... எங்கிருந்து இந்த வருட மழைக்கு தயாரகிறது. மேம்பாலம் கட்டோ கட்டுன்னு கட்டுனீங்க! ரைட்டு! அது காண்டிராக்டர்ஸ்தானே சித்தாள், மேஸ்த்திரி எல்லாம் வச்சு கட்டினாங்க! மழை நீர் வடிகாலுக்கு என்ன செய்து வச்சிருக்கீங்க?? எங்க ஏரியா மட்டுமில்ல எல்லா ஏரியாவுலயும் தெருக்கள் மழை நீர் வடிகால் விஷயத்துல கேவலமா இருக்குது, நிதியிருக்கும் கோ.புரமும், நிதிகள் இருக்கும் போட் கிளப் ஏரியா நீங்கலாக!

கிடைச்ச கொஞ்ச நஞ்ச நேரத்துல இலவச டிவி கொடுக்கற 5 வருஷ திட்டத்த இன்ஸ்டால்மண்ட்ல அமலாக்கி ஒரு கழகப் பாப்பா அல்லது பாட்டியோட போட்டோவுக்கு ஒரு போஸு! அப்பாவும் மகனும் இதையே வேலையா செஞ்சீங்க! மிச்ச நேரம் சட்ட சபையில மேசைய தட்டறத தவிர ஒன்னும் நடக்கல்ல!

ஆனா சொல்லிட்டேன், இந்த வரப்போற மழைக்கு மட்டும் போன வருஷம் மாதிரி போட்டு(Boat), கட்டுமரம்னு விட்டு பாருங்க! மக்களுக்கு மக்களே கிளம்பி உங்ககிட நேரே வந்து அப்புறம் “காகித ஓடம் கடலலை மீது போவது போலேன்னு” குடும்பத்தோட காலி பண்ணீட்டு கெளம்பீருங்க! உலக சரித்திரம்உங்களை மாதிரி எத்தனையோ சர்வாதிகாரிகளை கண்டதுண்டு. அதில் ஒரு சிலர் அவங்களுக்கு தேவையான அளவு மக்கள சொரண்டிட்டு, குடும்பம், உறவு, நண்பர்களை அழைச்சிட்டு வெவ்வேரு வெளிநாடுகள்ல போய் தப்பிச்சட்டாங்க! ஆனா ஒரு சிலர், நம்ம ஹிட்லர் மாமா, மார்கோஸ் சித்தப்பா மாதிரி ஜனங்ககிட்ட சிக்கி சின்னபின்னமான கதையெல்லம் நல்லா தெரியும்ல்ல! வர்க்கக் கோபம்னா இது தான்! இப்படித்தான் இருக்கும்!....நாறிடுவீங்க! சொல்லிட்டேன்!

Monday, July 20, 2009

அடி எழவெடுத்தவளே - Part 2
















மறக்க மாட்டேன்
என்றா
நினைத்தாய்!
உன்னை,
உன்
மந்திரப் புன்னகையை.

நினைத்திருப்பேன்
என்றா
இருந்தாய்!
நம்
மாலை நேரங்கள்
நீண்டு... குறைந்த்தை..!

உன்
கன்னக்குழைவும்
காது மடலையும்
எண்ணி எண்ணி
கனவு
காணமாட்டேன்!
கட்டாயம்
நாளைக்கு
மாலை
காத்திருக்க மாட்டேன்!

நீ
எழுதிய
கடித மடிப்பையும்
அதில்
கலந்து வந்த
உன்
காதல் மணத்தையும்
நுகரவே மாட்டேன்!
கரைப்படகு மறைவில்
கால் கடுக்க
நின்றிருக்கவும் மாட்டேன்!

சட்டைப் பையில்
பாதுகாத்த
உன்
பாதக்கொலுசை
இனி
பத்திரப்படுத்தமாட்டேன்!
உன் பார்வைக்காக
பஸ் படிக்கட்டில்
நின்றும் தொங்கியும்
பயணம் செய்யமாட்டேன்!!

அது சரி
நாளைக்கு நீ
வரச்சொன்னது
வழக்கமான
இடம்தானே?
நிச்சயம்
வரமாட்டேன்!
அடி எழ்வெடுத்தவளே!
கட்டாயம்
என்க்காக
காத்திருக்காதே!!!!

____________________

எக்ஸ்க்யுஸ்மீ ஒரு பதிவு கைமாத்தா கிடைக்குமா!


ஒரு வாரத்துல திருப்பி குடுத்துருவேன்!

ஏன்னா கடந்த ஒரு நாலு நாளாவே இனிமேல் உருப்புடியான பதிவுதான் போடனும், இல்லையா நம்ம ப்ளாக்க பெட்ரோல் ஊத்தி கொளுத்திடனும்னு யோசனை!

நாலு பேருக்கு நல்லது நடக்கனும்! சும்ம சுவிங்கத்த மெல்ற மாதிரியும் இல்லன்னா கதவ திறந்து வச்சுட்டு குளிக்கற மாதிரி சொந்தக்கதை எழுதறதும்னு பதிவெல்லாமே அலுப்பு or ஆபாசமான விஷயம்தானேன்னு ஒரு மாதிரியான realization! மனசு குணா கமல் மாதிரி அபிராமி அபிராமியென சுற்றி சுற்றி நடக்கிறது!

At the same time, ப்ளாக் என்பது என்ன? நம்ம நினைச்சது எழுதற தளம்தானேன்னு ஒரு தெனாவெட்டு!

இந்த மாதிரி மெண்டல் பிராப்ளம் ஏன் வருதுன்னு யோசிச்சா.....மற்ற நல்ல பதிவுகளைப் பார்த்து மிரண்டு போகும் என்னோட natureதான் காரணம்!

எனக்கும் டி.ஆர் படப் பாட்டெல்லாம் மனப்பாடமா தெரியுங்க! ஆனா இந்த நர்சிம் என்ன அருமையா ரசிச்சு எழுதியிருக்கார்! படிக்க படிக்க வழ வழப்ப வழுக்கிகிட்டே போய் அழகா முடிக்கிறாரு So, the point is உடனடியா நான் சினிமா பாட்ட பத்தி எழுதமுடியாது, யாராவது கேஸ் போடற அளவு நான் எழுதற வாய்ப்பு அதிகம்!

சினிமா விமர்சனம் நம்ம கட்சி கொள்கைக்கு எதிரானது! ஏனுங்க அண்ணாச்சி கடைய யாராவது விமர்சனம் பண்ணுவாங்களா? சரக்கு சரியில்லன்னா, ஜனங்க தானா கடைய மாத்திட்டு போகப்போறாங்க! ஆனாலும் I like Cable Shankar's reviews! சின்சியரா எழுதறாருங்க! கடுப்பு என்னன்னா, தெலுங்கு படத்தை பத்தியெல்லாம் எழுதறாரு! எனக்கு தெலுங்கு தெரியாது! போயா கொலுட்டின்னு ஒரு அனானி பின்னூட்டம் போடற அளவுக்கு பொறாமை தீ கொழுந்து விட்டு எரியுது!

எனக்கும் லக்கிலுக்குக்கும் சம்பந்தமே கிடையாது. but அவர் எதுக்கு, sorry நான் எதுக்கு அவர மாதிரி ப்ளாக் தளத்த முயற்சி பண்றேன்னே தெரியலே! Very very badங்க. ஒரு மனுஷன் இவ்வளவு தெளிவா அரசியலெல்லாம் எழுதினா, நானெல்லாம் What to do? வாரிசு அரசியல், சோனியாவின் பழிவாங்கும் வெறி, பொம்மை பிரதமர், உதவி முதல்வரா ஒரிஜனல் முதல்வரா? எடியூரப்பா தண்ணி குடுப்பா, அச்சமா அச்சுதானந்தா?, போயஸ் தோட்டத்து கோயபல்ஸ், கொடநாடு குடைசாய்கிறதா? சின்னம்மாதான் பெரியம்மாவா, மாம்பலம் வந்த ‘மா”ம்பலம் என்கிற கதியில் மனதில் வேக வேகமா தலைப்புகள் உருவாகுதே தவிர மற்றபடி பேப்பர் blankஆதான் இருக்குது! அது சரி, அரசியல் தெரிஞ்சாதானே!

கம்பரப் பத்தியெல்லாம் எழுதுற அத்தனை பேரோடும் காஃ! இதெல்லாம் டுட்டுடூங்க! போங்க சார் போய் புக்கு போடுங்க! இங்க spelling mistakeஏ தாவு தீந்துடுது! இவுங்க இலக்கியம் எழுதறாங்களாமா!

இப்பத்தான் மயில பார்த்தேன்! ஒன்னு சமையல் எழுதுங்க இல்லையா குழந்தை வளர்ப்ப பத்தி எழுதுங்க! என்னா அக்கிரமம், எல்லா பரப்புலயும் இயங்கறாங்க.....ப்ரா உட்பட! முடியல!

தினத்துக்கும் பார்த்து அப்பாடா இந்த பார்ட்டி புதுசா இன்னைக்கு ஒன்னும் எழுதலன்னு செல்வேந்திரனை பார்த்து சந்தோஷப்பட்டுக்கறது சாடிசத்தில சேராதுன்னு நினைக்கிறேன்!

OK, ஜூட்டு! அதுனால நமக்கு தமிழெல்லாம் ஆகாது! தவிர என்னதான் இருந்தாலும் அந்த காலத்துல பஸ் பீஸே 3ரூவா குடுத்து LKG சேர்த்து விட்டாங்கன்னு இங்கிலீசுல ஒரு ப்ளாக்க தொடங்கி......விட்டுட்டேன்! எழுதறப்பதானே நம்ம Englishல Isசு Wasசு Thatடூ விவரம் வெளிய தெரியுது!(அடடா கேப்புல வயச சொல்லிட்டனோ!)

சரி சரி, அடுத்தவங்கள வாழ்த்தியே நம்ம காலம் போயிடும் போல! பொழப்ப ஓட்டனும், இல்லைன்னா பெட்ரோல்தான்!

கடைசி முயற்சியா கேக்கறேன்! Anybody please இப்போதைக்கு ஒரு பதிவு கைமாத்தா கிடைக்குமா, Next week குடுத்துடறேன்!

ஏங்க, யாராவது, இந்த கிரிடிட் கார்ட் டைப்புல சர்னு தேய்ச்ச ஒரு பதிவு கிடைக்கற மாதிரி ஒரு ஃபேங்க் ஏற்பாடு செய்தீங்கன்னா, அனேகமா நல்ல பிஸ்னஸ் ஆகும்னு நினைக்கறேன்.

இந்த பதிவ ஒரு ஒப்பேத்தல்னோ, கணக்கு காமிச்சுடேன்னோ, காமெடின்னோ நினைக்காதீங்க! ரெம்ப சீரியஸா யோசிச்சு எழுதின உண்மை!

Saturday, July 18, 2009

செல்வேந்திரன், சுமஜ்லா மற்றும் பாலபாரதி







நண்பர் முடியலத்துவம் செல்வேந்திரனோடு நேற்று காலை தொலைபேசியில் கதைத்தபோது ப்ளாக்கர்களிடையே ஏற்படும் மோதல் குறித்து என் பார்வையை பகிந்து கொண்டேன். அப்படி பேசும்போது என் ப்ளாக் சரியாக போனியாவதில்லை என்கிற தகவலை நான் ஆத்ங்கமாக இடைசெருக, அவர் நம் எழுத்தின் இலக்கு சக ப்ளாக்கராக இல்லாமல் ம்ற்ற வாசிப்பாளர்களாக் இருப்பதே நலம் என்றும் பின்னூட்டங்களின் என்ணிக்கையில் மகிழ்ந்துபோவது அர்த்தமற்றது என்பதையும் இயம்பினார்.

அவர் அவ்வாறு சொன்னது அதற்கு முந்தினம் சக பதிவலர் சுமஜ்லா தன் 99வது பதிவில் குறிப்பிடிருந்த பின்னூட்ட எதிபார்ப்பு, அலுப்பு, பின்னூட்டங்களின் கிளிஷேதன்மை குறித்து பதிவிட்டிருந்ததை நினைவூட்டியது. அய்யாமாரே, அம்மாமாரே சின்ன புள்ளே, கம்பிமேலே நடக்குது பாருங்கோ, அல்லாரும் ஜோரா ஒருவாட்டி கைய தட்டுங்கோ சாமியோவ்! என்கிற எதிபார்ப்பில் ஒவ்வொரு பதிவிற்கும் மணிக்கு ஒருமுறை ப்ளாக்கை ரிப்ரெஷ் செய்யும் பழக்கமுள்ள எனக்கு பளிச்சென்று கடந்த சென்னை பதிவர் கூட்டத்தின் போது பதிவர் பாலபாரதி குறிப்பிட்டது ப்ளாஷடித்தது!

என் ப்ளாக்கில் கூட்டம் கூட்டுவதற்காக நான் முந்தானை, இடுப்பு என்றெல்லாம் பதிவுத் தலைப்பு வைத்துக்கொண்டிருப்பதை அவரிடம் பகிர்ந்துகொண்டிருந்தேன். பாலபாரதி ஒரு அருமையான ஒரு அனிச்சை தத்துவம் சொன்னார். அது "என் வீட்டு விசேஷத்துக்கு நீ மொய் எழுதறியா, நான் உன் வீட்டு விசேஷத்துக்கு மொய் எழுதுவேன்", அதன்படி மற்ற ப்ளாக்குகளுக்கு சென்று கருத்து இயம்பினால், நம் பதிவுக்கும் கருத்து கிடைக்கும் என்பது அர்த்தமாகும்! எனக்கு அது நல்ல ஐடியாவாகப் பட்டாலும், (சில)ப்ளாக்கர்களுக்கிடையே நடந்து வரும் வரம்பு மீறிய தகராறை மனதில் கொண்டு, எனக்கு ஏதும் கோஷ்டி ஸ்டாம்பு விழுந்து விடுமோ என்ற எச்சரிக்கைஉணர்வும் முழு முக்கியமாக என் சோம்பேரித்தனம் காரணமாகவும் அவ்வளவாக யாருக்கும் பின்னூட்டமிடவில்லை. ஆயினும் என் பதிவுகளை ரசித்த காரணத்துக்காகவே RR, பாலாஜி,, ஜெகநாதன், சடகோபால் முரளிதரன் மற்றும் பல முகமறியாத பல நண்பர்கள் பின்னூட்டங்க வாயிலாக என்னை உற்சாகப்படுத்தியதே இன்று வரை நான் பதிவிட காரணமாகிறது.

முதலில் சொன்ன செல்வேந்திரன் தொலைபேசி அழைப்புக்கு வருகிறேன். அவர் அவ்வாறு எந்தவொரு படைப்பும் வாசிப்பவர்களுக்கான பதிவு என்று எழுதுவதற்கும், சக படைப்பாளி படிப்பதற்கு என்ற எழுதுவத்ற்கும், எழுதும் போதான மனோபாவத்தில் வேற்றுமை உண்டு என்று குறிப்பிட்டது மிக நியாயமாகப்பட்டது! கூடவே படிப்பவர்கள் இடப்போகும் விமர்சனத்தையே மனதில் கொண்டு எழுதுபோது ஒருவிதமான அலுப்பும், திருட்டுத்தனமும் எற்ப்படுவதை நான் உணர்ந்திருக்கிறேன்.

அது போலவே பாலபாரதி கூறுகையில் தலைப்பில் பெரிதாய் ஒன்றுமில்லை, உள்ளே இருக்கும் விஷயம் படிப்பவனை தொட்டுவிட்டால், அட யாரு இவன் என்று நம் அடுத்த பதிவை தேடி படிப்பார்கள் என்றும் கூறியிருந்தார்!

சரிதான், என் முதல் வாசகர்கள் என்று யோசித்தால் என்னுடன் கல்லூரியில் பயின்ற சக மாணவர்கள். நான் எனக்கு பிடித்ததை, எனக்கு முடிந்ததைத்தான் எழுதினேன். பாதிப்பேர் என்னைப் பாராட்டி என் அடுத்த எழுத்து எப்போ எனகேட்டார்கள், மற்றவர்கள் படிக்காமலேயே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்! அன்று எனக்கு அது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை! காரணம் அந்த நண்பர்களின் ரசனை முற்றிலும் வேறானது என்பது எனக்கு தெரியும்! கூடவே மெச்சுகிற நண்பர்களின் நட்பை என்ணிக்கையாய் கணக்குப்போடாமல் எனக்கு கிடைத்த அங்கீகாரமாக நினைத்து மகிழ்ந்தேன்!

எனவே, என் எழுத்துக்களில் என்னைப் பகிர்தல் மிக முக்கியம்! படிப்பவரை கவர்ந்தேயாக வேண்டிய எந்த கட்டாயமும் எனக்கு இல்லை! பல கவிதைகளும் கதைகளும் 20வருடங்களுக்கு மேலாக ஒரு கேரிஃபேக்கில் நான் வீடுகள் பல மாறிய போதும் தொலையாமல் என்னுடன் வந்துகொண்டிருக்கிறது. எப்பவாவது எடுத்துப் படிக்கையில் சிலது மாணிக்கமாகவும், பலது மகா குப்பையாகவும் தோன்றும். இப்போ ப்ளாக் கிடைத்தது, பதிவிடுகிறேன்! இல்லையேல் நான் எதையாவது எழுதினால் அந்த கணத்தில் அருகிலிருப்பவன் பலியாவான் அல்லது அகமகிழ்வான் அவ்வளவுதான்! வெறும் வியாபாரப்பொருளாகிப்போன சினிமாக்கள் பற்றிய விமர்சனங்களில் மட்டுமல்ல மேலும் பல எதிமறை விஷயங்களில் நான் முரன்படுகிறேன்! ஆனால் இது வெறும் ப்ளாக், யாரோ ஒருவர் குறிப்பிட்டிருப்பது போல ஆஃபிஸ் நேரத்திலோ அல்லது ஆபிஸ் முடிந்து வந்தோ ஒரு வெளிப்பாட்டின் அடையாள்மாகவே எழுதப்படும் ப்ளாக்குகளை என் சக மனிதனின் தனிப்பட்ட மனக்கருத்து என்றும், மேற்படி பதிவுகள் அடுத்தவன் மனதை பார்க்க கிடைத்த சந்தர்ப்பமாகவே கருதுவது நலம் என்று தோனுகிறது. ஆயிரம் புடுங்கல்களோடு இருக்கும் இந்த அவசர வாழ்கையில் இத்ற்கு நேரம் எடுத்து எழுதுபவனை தட்டிக்கொடுக்காவிட்டாலும், கையை வெட்ட அலைவது தேவையா என தோன்றுகிறது.


இதில் என் தேர்வு அல்லது என்னால் முடியாததது பதிவர் சுமஜ்லா மாதிரி சக பதிவர்களுக்கு ப்ளாக் நுட்பமோ, சுயதொழில் வழிமுறைகளையோ சொல்லிக்கொடுப்பது. இதுவே நம் இந்தியா மாதிரியான மூன்றாம் உலகநடுகளுக்கு constructive approach என நினைக்கிறேன்.

இல்லை நான் போராளி, புரட்சிக்காரன், உண்மை சொல்லும் பத்திரிக்கையாளன் என்கிற அகம் என்னில் காரமானால், என் மக்களுக்காகவோ, எதிரிகளை நோக்கியோ களம் இறங்குவதே நலம் என திட்பமாக தோன்றுகிறது!

அதற்காக யாரையும் யாரும் விமர்சிக்கக்கூடாது என்கிற அர்த்தம் இப்பதிவில் அர்த்தம் கொள்ளக்கூடாதென சர்வாதிகாரமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

Friday, July 17, 2009

விடிந்த இரவொன்றில்......29/06/2007




விழுந்து அழியும் அருவியின்
பேரிரைச்சல் இல்லை.
உதிர்ந்து மடியும் மலரிதழின்
சோகமும் இல்லை.
இனியும் வருமென
அலையடித்த கரை இறுக்கமும் இல்லை.
ஆழி முடிந்த உலகாய்
திசை எட்டும் வெறுமை இல்லை
கான்பதெல்லாம் இருளே!

கிணற்றில் வீழ்ந்தனவோ கண்கள்
பூகம்ப இடிபாடுகளோ இமையில்
காணவில்லை கனவுகளை
பசித்த இதழ்கள்
சிரிப்பை தின்றுவிட்டன!
மென்ற மீதங்கள்
வடிவிழந்து வாயருகே
சிரிப்பின் பிணங்கள்!

தொடர்ந்து போகவோ
திரும்பி வரவோ
விருப்பமின்றி
கைகாட்டி மரமாய்
புதைந்துவிட்ட கால்கள்.
இனி
பிறப்பில் ஆர்வமில்லை.
இறப்பும் தெரியவில்லை.
செய்வதென்ன?
செல்வதெங்கே?
சுவாசத்தின் தேவையென்ன?
தெரியவில்லை

Thursday, July 16, 2009

அடி எழவெடுத்தவளே - Part 1



என் நினைவுகளை
கட்டிவிட்டாய்
சிந்தனையும் சேர்த்து

என் இயக்கத்தை
கட்டிவிட்டாய்
இமைப்பதையும் சேர்த்து!

என் கனவுகளை
கட்டிவிட்டாய்
உறக்கத்தையும் சேர்த்து!

என் இதயத்தை
தட்டி விடடாய்
உயிர் துடிப்பையும் சேர்த்து!

ஏன் இப்படி?
என்னால்
உயிர்வதை
தாளமுடியவில்லை!

அடி எழவெடுத்தவளே....

ஒன்னு
காதலி!
இல்லையா
கொண்ணுடு!!



இந்த கொடுமைக்கான காரணம் இந்த கவிதை எழுதிய வருடம் 1996 இறுதியில். 25 வயசு திமிரு! நாங்கல்லாம் யாரு தெரியுமா? கம்பன், காளிதாசன், ஷெல்லி, கீட்ஸூ, வேர்ட்ஸ்வர்த் எல்லாத்தையும் உருட்டிபுடிச்சு அதுல ஸ்பீல்பர்க் ரெண்டு அவுன்ஸ், ஜேம்ஸ் கேமரூன் ரெண்டு அவுன்ஸ் ஊத்தி டொண்டிபர்ஸ்ட் செஞ்சுரிக்காக இந்த இயற்கையால பஞ்சுல பாவெடுத்து, கிரியேட்டிவிட்டில நெய்ஞ்சு எடுக்கப்பட்ட கலைஞன். ஃபட்டா, நானெல்லாம் ப்ளடி இந்த கோயாமுத்தூர்ல இருக்கற பட்டிக்காட்டு ஃகேர்ள்ஸ பார்க்ககூட மாட்டேன்னு மனசில நினைச்சுகிட்டு நிசத்தில யாரையும் காதலிக்கலே (அ) யாராலும் காதலிக்கப்படலேங்கற ஒரு சூழ்நிலையில இருந்தோம்.

ஆனா.... ஒரு கவிஞன் தன் காலத்தில் பல காதல் ரசம், சாம்பார், தயிர், மோர் சொட்டும் கவிதைகள் புனையனும் இல்ல பிசையனும்! அதுக்கு காதல் எக்ஸ்பீரியன்ஸுக்கு எங்க போறது? அதென்ன பெரிய விஷயம் ரோட்ல போற வாற புள்ளைக ஒன்னுவிடாம நம்மளைத்தான் காதலிக்குதுன்னு நினைச்சு, முயற்சி பண்ணினா..... அப்ரேஷன் சக்சஸ் - பேஷண்ட் செத்துபோயிட்டார், அதாவது கவிதை சகிக்கல!

இப்ப அதுக்கு என்ன வழி? ஓகே ஒரு கவிஞன் எல்லா நேரத்திலும், எல்ல இடத்திலும் கவிஞனாக, காதலனாக இருக்கும் பொருட்டு 3 இடத்துல 3 லவ்வர் பிக்ஸ் பண்ணியாச்சு! நெ.1)பஸ்ஸுல கூட வர்ற கீர்த்தி, நெ.2)ஆபிஸ்ல கூட வேலை பார்க்கற பரமேஸ்வரி நெ.3)பில்டிங் ஒனர் பொண்ணு ஜோதி! இதுல நெ.1 கூட நான் பேசினதேயில்ல! நெ.2 கூட பேசறதுக்கு விஷயமேயில்ல. ஏன்னா, இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமயிடுச்சு, அதாவது அவங்க நம்ம கிரியேட்டிவிட்டிக்கு ஒரு குறியீடு மாதிரிதான், மற்றபடி நமக்கு அவங்ககிட்ட ஒரு சோலியுமில்ல. இதுல் நெ.3 ரொம்ப இண்ட்ரஸ்ட்டிங், மொத்தமே 3தடவ அவங்கப்பகூட பாத்திருக்கேன், 12வது படிச்சது. முதல் பார்வைலயே அங்கிள்னு கூப்பிட்டு ஆப் பண்ணிடுச்சு. But No Problem, ஹே ஹே திஸ் கோயாம்பட்டூர் கண்டிரி கேர்ள்ஸையா நாம லவ் பண்ண போறோம்! நோ! ஒன்லி லுக்கிங் அண்ட் கவித ரைட்டிங்!

இது மெத்தேட் ஓகேதான், லிட்டில் டெக்னிக்கல் மிஸ்டேக்! ஏன்னா அவங்கள காதலியா ஒரு கவிஞன் நினைக்கலாம்! ஆனா நிசமான காதலனா தன்னை உணரனும்னா நிசமாவே காதலிக்கனும்! நோ.....! திஸ் கோயாம்பட்டூர் கண்ட்ரி கேர்ள்ஸ்??? நோ வே! வாட் டு டூ? கரெக்ட்டா எனக்கு ரூம்மேட்ட வந்து சேர்ந்தாரு நம்ம குமாரு! அவரு படுதீவிரமா, பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில அலட்டிகாம லவ் பண்ணிட்டிருந்தாரு! மேட்டர் ஓவர்! ஏங்க ஒரு காதல் பண்ற மனுசன்கூட பொழுதுக்கு பழகினா காதலனோட உணர்ச்சி கிடைச்சிடதா? கவித வந்துடாதா? வருமுங்க, கவிதை, காதல் உணர்வு எல்லாமே அந்த நிசக்காதலன் கிட்டருந்து வெளிப்பட்ட தருணங்கள, அவர் தன் காதல் அரும்பிய விதம், அதனுள் நிக்ழ்ந்த ஊடல் அப்பிடி இப்பிடின்னு நம்மள வெறுப்பேத்தறக்கு எத்தன சொல்லுவாரு! அதைய கற்பனை பண்ணினேன், கவிதை பல எழுதினேன்! இந்த மேற்படி என்னோட கவிதை இன்ஸ்ப்பிரேஷன் குமாரின் காதல் சைடும், உடன் நம்ம கற்பணை பாப்பாக்களோட நான் கற்பனையா செய்த காதல்களும் இணைத்து நெய்யப்பட்டது!

குமாரும் நம்ம ரசிகர்தான். அந்த காதல் ஜோடியோட குழந்தை இப்ப 3ஆம் கிளாஸோ 4ஆம் கிளாஸோ படிக்குது!

எனக்கு நிசமாவே பொண்ணு தேடினப்போ, கோயமுத்தூர்ல கிடைக்கவேயில்ல! முற்பகல் கண்ட்ரின்னு கிண்டலடிச்சா, பிற்பகல் நோ எண்ட்ரின்னு துரத்திட்டாங்க!

Wednesday, July 15, 2009

Tuesday, July 14, 2009

முதல் ஆசையுடன் கூடிய கடைசி ஆசை! - கவிதை

ஒரு நாளில் பிரிந்தாலும்
உண்மையான நட்பு வேண்டும்!

மறுநாளே கிழித்தாலும்
உடுத்த நல்ல ஆடை வேண்டும்!

பாதியில் கொட்டினாலும்
பல்சுவை உணவு வேண்டும்!

நாளைக்கு உறுதியாய் பாடைதானென்றாலும்
இன்றைக்கு நேரங்கள், இனிமையாய் கழியவேண்டும்!!


முன்னாலயே சொல்லியிருக்கவேண்டிய பின்குறிப்பு: கிராமத்து மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நான் 10ஆம் வகுப்பு படிக்கையில் இந்த கவிதைய எழுதிவிட்டு படித்துப் பார்த்த போது நான் பேச்சு வந்த சரஸ்வதி சபதம் சிவாஜி கணக்காய் உணர்ச்சி குளறி குப்பிளித்து என் வகுப்புத் தோழர்களை பரவசமாக அழைத்து மேற்படி கவிதையை படித்துக் காட்டி "இந்த கவிதையிலிருந்து நான் என்னை தமிழ் கவிஞன் என்று பிரகடணம் செய்கிறேன்" என்று வீரமாக சூளுரைத்தேன். அணைவரும் கொந்தளிக்கும் உணர்ச்சி தக்கணூண்டு கூடயில்லாமல் "சரிடா சீக்கிரம் வா, அடுத்த பிரியடு மிஸ்ஸு வந்துருவாங்க" என் அவசர அவசரமாக ஒன்னுக்கு அடிப்பத்ற்க்கு அழைத்துப் போய்விட்டார்கள்! பொற்றாமரைக் குளத்தில் தமிழ் சங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்படவேண்டியவன், ஷூவிலும் ஃபேண்ட்டிலும் சிதறாமல் அடித்துவிட்டு வந்தேன்!

Monday, July 13, 2009

ஒரு டவுட்டுகள்?

பொது / அரசு / பொதுமக்களுக்கான பள்ளிக்கூடங்கள் இந்தியாவில் 19ஆம் நூற்றாண்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டதாம். அதாவது அதுவரைக்கும் ஃபார்வேர்ட் கம்யூனிட்டி என்று இப்போது அழைக்கப்படுபவர்களும் பெருஞ்செல்வந்தர்களுக்குமே(சத்திரியர்கள்) கல்வி கற்க அனுமதி! ஆனா நம்ம முந்நாள் முதல்வர் காமராசர் மதிய உணவு திட்டம் கொண்டுவந்தப்பதான், நம்மாள் படிக்கவே வந்திருக்கான். அடேங்கப்பா அதுவரைக்கும் என்னா டெக்னாலஜி பாத்தீங்களா? அடிப்படை சோத்துக்கே அலையவிட்டாதான், இவனுக நமக்கு சமமா கல்விய கேக்க வராம இருப்பானுக!

ஏனுங்கண்ணா, ஜஸ்ட் ஒரு 50-60 வருஷம் இடஒதுக்கீட்டுக்கே கிரிமி லேயர், கப்பய்ஸ் லேயர்னு கதறல் கேக்குதே! இவங்களுக்கும் ஒரு 1800 வருஷம் கல்விய மறுத்தா எப்பிடித்தான் இருக்கும்?

கொடுமை என்னானா, அப்போ பேக்வேர்டாயிருந்த சில சமுகத்தை இப்போ வம்படியா ஃபார்வேர்ட்டுல சேர்த்துவுட்டுட்டாங்களாம்மா! யாரை கேள்வி கேக்கறது? அவனுக உண்மைலயே கில்லாடிகதாங்க!

____________________________

ராமசாமின்னு ஒருத்தர கடவுள் மறுப்பாளர், மேல்சாதி எதிர்ப்பாளர்னு தொடர்ந்து பிரான்ஃடிங் பண்றானுங்க! கெடையாது, அவரு பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரா குரல் கொடுத்தவருன்னு முக்கியமான செய்திய நம்ம டமில்நாடு கவருமெண்ட்டு ஆரம்ப கல்வி பாடத்திட்டத்துல கொண்டுவந்தா, அட்லீஸ்ட் அவரால் பயனடைஞ்சவங்களுக்காவது உண்மை தெரியுமில்லிங்கோ!

______________________

இப்போ ஒரு நடிகரோட ரசிகர் மன்றத்துக்காரங்களோ இல்ல கட்சிக்காரங்களோ ஒரு பத்திரிக்கையோ டிவியோ ஆரம்பிச்சா அதுக்கு பேரு ரசிகர்மன்ற பத்திரிக்கை அல்லது கட்சி டிவி!

அதே ஒரு பத்திரிக்கைகாரங்களோ இல்ல டிவிகாரங்களோ அவங்க சொந்த ப்ரொடக்ஷன்ல படம் எடுத்து அதை பெரிசா மார்க் போட்டு ஊதியூட்டாலோ அல்லது அளவு கடந்து ட்ரெய்லர் போட்டாலோ அவங்க பேரும் ரசிகர் மன்ற பத்திரிக்கை, ப்ரொடக்ஷன் கம்பெணி டிவிதானுங்கண்ணா?

_______________

பொதுவா அரட்டை அரங்கம் மாதிரியான நிகழ்ச்சியில ஏதாவது ஒரு குழந்தை "சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சாதியே இல்லைங்கறாங்க சார்ர்ர்ர்ர்ர்ர், அனா...... பள்ளிக்கூடத்துக்கு போனா முதல்ல சாத்ச்சான்றிதல்தான் கேக்கறாங்க சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு" உச்சகட்ட கேனத்தனமா பேசுது! உடனே பாத்துட்டிருக்கற கூட்டமே கைய பிஞ்சுபோற மாதிரி தட்டுதுங்கண்ணா! ஒரு ஆள் டவலை வாய்ல வச்சிட்டு மனசுக்குள்ள "ஆஹா கூட்டத்துக்கே வச்சிட்டமடா ஆப்புன்னு" சந்தோஷம் தாங்காம அழுகறான்! கொடுமை என்னான்னா பேசற பாப்பாவும் கையி பிஞ்சு போன கூட்டத்துலயும் முக்காவாசிப்பேரு இடஒதுக்கீட்டால பயனடைஞ்சவங்களாயிருப்பாங்க! இப்பிடி சந்தடியில்லாம இடஒதுக்கீட ரெம்ப புத்திசாலித்தனமா விமர்சனம் பண்ணிட்டிருக்காங்க! ஏனுங்கண்ணா இடஒதுக்கீடு நம்ம டமில்நாட்டுல எப்பேர்பட்ட சமாச்சாரம்? அதை ஒரு வரலாற்று நிகழ்வா நம்ம பாடதிட்டத்துல வைக்கறதுக்கு தடுக்கறவங்க யாருங்கண்ணா?

_____________

டிசம்பர் மாசமானா போதும் சென்னையில கர்நாடக சங்கீத வெள்ளம் கரை புரண்டு ஓடுதுன்னு சம்பந்தப்பட்டவனும் எழுதறான், கருமம் சம்பந்தப்படாதவனும் எழுதறான்! 11 வருஷமா சென்னைல குடியிருக்கறனுங்கண்ணா! சாமி சத்தியமா ஜெமினிலிருந்து காந்தி செலை போற வழில மயிலாப்பூருக்கு திரும்பற எடத்துல இருக்கற ரெண்டு சபாலயும் குறிப்பிட்ட ஒரு 500 - 700 ஃபேமிலி ஆளுக தவிர பாடறவனும் எவனுமில்ல கேக்கறவனும் எவனுமில்ல!. இப்ப சமீபகாலமா எல்லா கிளப்லயும் டிசம்பர் மாசத்துல இந்த கூத்து ஏற்படாயிட்டிருக்கு! அங்க வந்து பாட்ட கேட்டுத்தான் பலபேரு தூங்கறானுக இல்லையா கேண்டீன்ல இட்லி, ரசவடை, நெய்ரோஸ்ட்னு வீசு வீசுன்னு வீட்டிருக்கறானுக! ஃபுகழுக்காக கேரளா சைடுலர்ந்து வந்து கவர் அடிக்கறவன கணக்கிலெடுக்கமுடியாது!

ஆனா ஆடி மாசம் கூழு ஊத்தற சீசன்ல முக்குக்கு முக்கு எல்லா கோயில்லயும் சாதரன, ஆர்ப்பாட்டமில்லாத கருவிகளை வைச்சு நம்ம நாட்டுப்புற இசைல அடிக்கற அடியில் எத்தன பேருக்கு சாமியே வருது தெரியுங்களா! தெரியாம கேக்கறேன் சாமியே இறங்கி வர்ற இசை நம்முளுது, ஆனா அதுக்கு இந்த மணுசப்பபயலுக ஏனுங்கண்ணா சபா குடுக்க மாட்டேங்கறானுக! ஒன்னு அவனுக நாத்தீகனுக! இல்லையா சாமிகளுக்கு மத்தியிலயும் சாதிப்பிரிவிணை இருக்குது!

____________________

பெண் விடுதலைக்கு எதிரான மெயினான ரெண்டு மேட்டர் பெண்கள்கிட்டயே கெட்டியா இருக்கி புடிச்சிட்டிருக்குது தெரியுங்களா? முதல்ல கொஞ்சம் லைட்டான மேட்டர் சொல்றனுங்க. நெம்பர் ஒன்னுங்க தெட் இஸ் சாரி... அதாவது சேலை! இந்த சேலை என்கிற பெண்கள் உடைய கண்டுபுடிச்சவன் கண்டிப்பா ஒரு தேர்ந்த ஆணாதிக்கவாதியாத்தான் இருப்பான். ஏன்னா, இந்த சேலைய கட்டீட்டு ஒரு பொம்பளையால ஃபேண்ட் போட்டுட்டு ஓடற்மாதிரி ஓட முடியுமா? ஆள் கீட்டயிருக்கைல மேல பரன்லயிருக்கற பொருள கைய தூக்கி எடுக்க முடியுமா? அதவுடுங்க பஸ்ல ஸ்டாண்டிங்ல மேல கம்பிய புடுச்சு நிக்க முடியுமா? கீழ ஆள் நிக்கையில ஏணில ஏற முடியுமா? ஆனா இதுதான் பணுபாட்டு உடையாமாங்கோவ்!

நெம்பர் டூவுங்க ஃகாட்.... அதாவது சாமீங்க! நம்ம சாமி எல்லாத்துக்கும்(சில அவதாரம் நீங்கலாக) டஃபுள்ஸ்ங்க. குறிப்பா ரெம்ப சக்தியான சாமிக அதுவும் பொம்பளைக அதிகமா போற கோயில்ல... உதாரணமா பழனிமலை, திருப்பதி மலை மாதிரியான இடங்கள். மேல்மருவத்தூர் சாமிங்கறது கொஸ்ட்டீன் பேப்பர்ல வர்ற் ஆப்ஷன் மாதிரி இல்லன்ன ஃபைனல் இயர்ல வர்ற எலக்டீவ் சப்ஜெக்ட் மாதிரி, கண்டிப்பா மெயின்ல கிடையாது! சிவனுக்கு கங்கா தலைல இருக்குமாமா! விஷ்னுவுக்கு ரெண்டு ஆளுக! பிரம்மாவும் நம்மாளு! இங்க நம்மபக்கத்துல வினாயகர ஃபேச்சிலர்னு சொல்றோம் ஆனா ஃநார்த்த்ல அவருக்கு சித்தி & புத்தி டூ பேரு இருக்காங்க! டாட்டர் பேரு சந்தோஷி மாதா! வந்து போயி ஆஞ்சநேயரும் ஐயப்பனும் யுனிவர்சலா பக்கா ஃபேச்சிலர்ஸ், ஆனா அவங்களை ஆம்பளங்கதான் சாஸ்தியா கும்பிடறாங்க! பத்தினிவிரதன்ங்கற ஒன்லி காரணத்துக்காக ராமர இதிகாச நாயகனாக்கிட்டாங்க, கூடவே அப்பிடிப்பட்ட ஆளெல்லாம் பொண்டாட்டிய சந்தேகப்படுவாங்கண்ணு ஒரு ப்ளாக் மார்க் வச்சிட்டாங்க!

இப்பிடி தங்களை காலி செய்யற ரெண்டு விஷயத்தையும் நம்மூரு பொம்பளைங்க மனசிலயும் உடம்புலயும் சுத்திட்டிருந்தா, பெண் விடுதலைய தப்பு தப்பா புரிஞ்சுகிட்டு குடும்ப நல் நீதிமண்றத்துல ஃபெண்டிங்லயிருக்கற 56001வது கேசாத்தான் பதிவு செய்யோனும். எனக்கெண்ணவோ நம்ம பொம்பளைங்க ஒன்னு சாமி குபிடறத நிறுத்தனும் ! இல்லையா கம்ப்யூட்டர் வேலைக்கு போறத நிறுத்தனும்! பழமை வளர்ப்பு Vs திடீர் பொருளாதார சுதந்திரம் - காம்பினேஷன் ரெம்ப தப்பாயிருக்குதுங்கக்கா!

__________________________

வேலைலயே கஷ்டமான வேலை, படிப்புலயே கஷ்டமான படிப்பு - இதுக்கெல்லாம்தான் சம்பளம் TA, DA, HR, லொட்டு லொசுக்கு அதிகம்! அவ்வளவு பெரிய படிப்பு படிச்ச மகரசனுக தெருவுல சாக்கடை அடைச்சிட்டா அந்த மேதாவிகளால அந்த சாதாரன சாக்கடை மேட்டர டீல் பண்ணமுடியுதா? அந்த பீட்டர் பொன்னாடங்க என்ன பண்ணுது? கர்ப்ப்ரேசனுக்கு போன் பண்ணுது! அங்கிருந்து படிபறிவேயில்லாத சாதரண ஆளுக ஒரு மெஷ்ன இழுத்துக்கிட்டு வாறாங்க! ட்யுப்ப உள்ள விட்றான், வெளிய இழ்க்க்றான்.....ஹுஹும் ஒன்னும் நடக்கல. இப்போ இந்ஹ்ட் படிக்காத மேதை ஒரு குவாட்டரையோ ஆஃப்பையோ கவுத்திகிட்டு உள்ள போயி அடைப்பை சரி செய்யறான். அப்படி சாக்கடையில் மூழ்கி வேலை செய்கையில் மலக்கழிவுகள் அவன் முகம் வருடும் . அதை சகித்து வேலை செய்கிறான். தக்காளி, உங்க சாஃப்ட்வேரோ ஆட்டோமொபைலோ அமெரிக்கா போகலன்னா இல்ல கோயில்ல உச்சிகால பூஜை நடக்கலைன்னா எவனும் செத்து போயிடமாட்டீங்க, ஆனா இந்த அடைப்பை 2-3 நாள்ல எடுக்கலைன்னா மகனே எவனும் காலைல கஃகா போகமுடியாது. அடைச்சு செத்து போயிடுவீங்க! ஆனா இதை சரி செய்யறவன் தாழ்த்தப்பட்டவன், கூலியும் குறைவு! சண்டாளப்பாவிகளா..... ரோட்ல பாக்கறீங்களா இப்ப சமீப காலமா இந்த அடைப்ப எடுக்கற வேலையை நோஞ்சானா பதின் பருவத்து பசங்க செய்யறாங்க! வாரிசுரிமைல இந்த வேலயெல்லாம் டக் டக்னு கிடைச்சிடும் போல! அவனுக எவ்வளவு ஒல்லி தெரியுமா? அவன் போட்டிருக்கற ஒற்றை உடை, அந்த ஜட்டியே அவனுக்கு லூசாயிருக்கு! அவ்வளவு அனீமிக்கா இருக்கான்! சராசரி இந்திய வயதான 50 வயசாகைல அவனால சாகக்கூட முடியாது!

மேட்டர் நல்லாருக்கா...... அடுத்த படத்துக்கு இதையே சப்ஜெக்டா வச்சிடுவமா?

Saturday, July 11, 2009

நானும் சிவனும் – (சிறு)கதை

 

siva1

திம் தக தக

திம் தக தக

தித்தோம் தகதோம்

ஜதி பிறழாத தாளம் காதில் கேட்கிறது! எங்கோ தூரத்திலிருந்து வருவது மாதிரி கிட்டத்திலும்தான் கேட்கிறது. இசைப்பவர் யாரும் இல்லை, ஆனால் ஒலி தெளிவாய் காற்றில் கலந்து வருகிறது.

அரையிருட்டு நேரம், புலர்பொழுதா இல்லை அந்தி சாய்கிறதா?  எங்கேயோ என்னவோ எரிக்கிறார்கள். மெலிதாய் புகை காற்றில் பரவ, பர்வை தெளிவில்லை. கண்ணுக்கெட்டும் தூரத்தில் மேடும் பள்ளமுமாய் காணும் பகுதி வெட்டவெளியா சுடுகாடா என்று தெளிவுபடுத்திக் கொள்ள முடியவில்லை.siva2

புகை காட்சியை முழுதும் மறைக்காமல் அவ்வப்போது ஆங்காங்கே விலகுகையில், அவன் ஆடிக்கொண்டிருக்கிறான் என்பது தெரிகிறது. ஆட்டத்தில் ஒரு விதமான முரட்டுத்தனம் கலந்திருந்தது! அனேகமாக அவன் உடலெல்லாம் விய்ர்த்து ஒழுகிகொண்டிருக்க வேண்டும். இது என்ன மாதிரியான ஆட்டம்? ஜதி மொத்தமும் மாறி நாட்டுப்புறத்தாளமாய் மாறிவிட்டிருக்கிறது. அவன் ஆடுவது இந்த திந்தக்கு திந்தாக்கு மேளத்துக்கும் பொருத்தமாகதானே உள்ளது!  அந்த ஆட்டத்திலிருந்த அதிர்வும் கணமும், அவனருகே சென்று பார்க்கும் ஆவலை கட்டுபடுத்தி என்னை ஒரே இடத்தில் நிற்க வைத்துள்ளது. siva3

 

இப்போ புகை ஒரளவுக்கு கட்டுப்பட்டிருந்தது.  எங்கிருந்தோ வெளிச்சம் வ்ருகிறதா இல்லை இருட்டுக்கு கண் பழகிவிட்டதோ, எனக்கு அவன் முகம் மங்கலாக தெரிகிறது. அவன் முகமே அவ்வளவுதான், இன்ன மாதிரி கண்கள், இப்படியான மூக்கு என்கிற விவரணைகளுக்கு உட்படாத அடையாளம் அவனுக்கு. ஆடுவதை அவன் நிறுத்தவில்லை. என் பார்வை கூர்மையாவதை கவணித்தவன் போல ஒரு சிரிப்பு சிரிக்கிறான், கேலிச்சிரிப்பு அது. நான் பார்ப்பது அவனுக்கு சந்தோஷம் போலும், ஆட்டத்தில் வேகம் கூடுகிறது! சிரிப்பையும் தொடர்கிறான். ஏன் சிரிக்கிறான்? நான் ஒரு எட்டு கூட முன்னுக்கு வைக்காமலேயே அந்த ஆடல் காட்சி என்னை நோக்கி நகர்கிறது. அங்கிருந்த புகையும், தரையிலிருந்த மேடு பள்ளங்களும் மங்கிப்போய் அவன் ஆடுவது மட்டுமே கண்களுக்கு பிரதானமாக தெரிகிறது. ஆனாலும் முக அடையாளமென்னவோ தெரியவேயில்லை. அவன் கை கால் அடையாளங்களைப் பார்த்தால் யாரென்று அறியமுடியும் போல! எங்கேயோ பார்த்த ஆள்தான், ஆனால் வேறு உடையில்!

எனக்கு இப்போது கிருத்தியமாக கேட்கும் தாளம் வகைப்படுத்த முடியவில்லை. இப்போது அவன் மேலும் சிரித்தபடியே சுழன்று ஆடுகிறான். இனி கண்டுபிடித்துவிடலாம் போலத்தான் தெரிகிறது! அவன் அவையங்கள் கொஞ்சம் தெளிவாக தெரிகிறது. முதலில் அவன் கழுத்து, அதில் என்னவோ ஒரு வித்தியாசம். அங்கே ஒரு பாம்பு சுருண்டு தலையை சாய்த்துக்கொண்டுள்ளது! அந்த பாம்பு நெற்றியில்  கோடுகள் தெரிகிறது, அது ஒரு நாகப்பாம்பு. பாம்பின் நெற்றி தெரிகிறது, ஆனால் ஆடுபவன் முகம் தெளிவாகத் தெரியவில்லை! நான் அவனை வகைப்படுத்தும் முயற்சியில் ஏற இறங்கப் பார்க்கிறேன். மேலாடையில்லை. சீரான மார்பு ஆனால் சுவாசத்திற்கான எற்ற இறக்கம் இல்லை. ஒரு பம்பையோ உடுக்கையோ அசைவேயில்லாமல் இடுப்போடு ஒட்டிக்கொண்டுள்ளது. காலுக்கு கீழே பாதங்கள் தெரியாத அளவுக்கு புழுதி பறக்கிறது.  ஆனால், அது புழுதியல்ல சாம்பல்! அவன்…… சிவன்!

 

ஜதி மாறாமல் புன்னகை கலையாத முகத்தில் ஒரு வைராக்கியம் பிடிபடுகிறது. சிவன் எமன் மாதிரி ஆடிக்கொண்டிருக்கிறான்? வேர்க்காத உடம்பிலிருந்து என்னவோ கொட்டுகிறது! என்ன அது? இப்போது நான் முன்னேறுகிறேன். அவன் உடம்பிலிருந்து உதிர்ந்து கொட்டுவது சாம்பல். கருப்பும் பழுப்புமாய் பொடிந்து உதிரும் சாம்பல் கொட்ட கொட்ட அவன் அரூபமாகிக்கொண்டிருப்பது புரிகிறது. சதையெல்லம் சாம்பலாய் கொட்டிவிட்டால் எலும்பு இருக்குமே! சிவனுக்கு சாவுண்டா? அல்லது எலும்புக்கூடாய் தோம் தொம்மென ஆடுவானா? பார்க்கப் பிடிக்காத காட்சியை மனம் கற்பனை செய்ய மறுக்கிறது.

நான் முன்னே நடந்து நடdancing_skeleton-leftந்து அவனுக்கு அருகேயேதான் சென்றுவிட்டேன். அவனிலிருந்து உதிரும் சாம்பல் தெளிவாக தெரிகிறது. எடுத்து நெற்றியில் பூசமுடியாது. அது பொடிப் பொடி கட்டிகளாக உதிர்கிறது. அருகே போயும் தாளத்தின் சப்தம் காதை அடைக்கவில்லை! திமி திமி திமி என அவன் பூமியை உதைப்பது எனக்கு உறைக்கவில்லை! அவன் காற்றில் ஆடுகிறான். சாம்பல்தான் கீழே புழுதியோடு கொட்டிக்கொண்டிருக்கிறது. சாம்பல் துளிகளைப்பார்க்கிறேன், அதில் என்னவோ அசைவு தெரிகிறது. அசைவில்லை அது என்னவோ காட்சி. அங்கே நான் இருக்கிறேன். பள்ளிக்கூடப் பையனாய், அப்பாவிடம் பிராக்ரஸ் கார்டில் கையெழுத்து வாங்கிக்கொண்டு. அப்போது நான் சரியாக கவணிக்கவில்லை போலும், இப்போது அப்பா முகம் நன்றாகத் தெரிகிறது. ரொம்ப வருத்தமாயிருக்கிறார். அடுத்த சாம்பல் பொடியிலும் நானே, கல்லூரியில் முதல் வருடப்பையனாய், அதுவும் கூட அப்பா அருகில்தான்! ஐந்து பாடத்தில் அரியர்ஸ் என்கிறேன். அப்பா ‘அப்படியா, சரி’ என்கிறார். நான் என் தகவலை சரிப்படுத்துகிறேன் ‘அரிய்ர்ஸ்னா ஃபெயிலுங்கப்பா’. அவர் என்னைப் பார்க்கிறார்; அப்படின்னா, ரண்டாம் வருஷம் போகமுடியாதாப்பா?” என்கிறார். நான் ‘இல்லீங்கப்பா, ரண்டாம் வருஷம் போயி கூட இத மறுபடி எழுதி பாஸ் பண்ணிடலாம்’ என்கிறேன். அப்பா வெறுமனே என்னைப்பார்த்து தலையாட்டுகிறார், அவர் முகம் கிட்டத்தில், அப்பாவுக்கு கூர்மையான கண்கள், வருத்தப்படுகிறார். நானோ போய்க் கொண்டேயிருக்கிறேன். தொடர்ந்துஒவ்வொரு சாம்பல் துனுக்கிலும் என் ஒவ்வொரு வயசாய் கடக்கிறது. ஒரு சாம்பலில் ‘வீட்டுக்கு நீ ஒன்னும் செய்யவேண்டாம்டா, உனக்கான நல்லதையாவது நீ செஞ்சுக்க’ என்று முன்பே சொன்னதுதான் என்றாலும் இப்போதுதான் அந்த நிமிடத்தில் அப்பா முகம் எப்படி வாடிப்போயிருக்கிறது என்பது தெரிகிறது. சாம்பல் கொட்டுவது நின்று போக நான் நிமிர்ந்து பார்க்கிறேன், சாம்பலாய் கொட்டித் தீர்த்தவன் காற்றில் கலந்து போய்விட்டான்; அனாலும் ஆடிக்கொண்டிருக்கிறான்.  அவன் மூச்சிறைப்பது காதில் கேட்கிறது. புகை மறைந்து அரையிருட்டில் பார்வை நன்றாக பழகிவிட்டிருக்கிறது. ஒரு ஒற்றை சாம்பல் துணுக்கு மரத்திலிருந்து விழும் இலை மாதிரி ஆடி ஆடி மெல்லமாக தரை தொடுகிறது.

siva5

தரையில் மற்ற சம்பல் பொடிக ளுக்கு மேலாக தென்படும் அதில் என்ன காட்சி என்று ஆவலோடு பார்க்கிறேன். அதிலும்கூட நானும் அப்பாவும்தான்! நான் அழுதுகொண்டிருக்கிறேன், அப்பா அசைவின்றி படுக்கவைக்கப்பட்டிருக்கிறார்!   அப்பா முகம் தெளிவாகத் தெரிகிறது, சலனமேயில்லாமல்! விரிவடையும் காட்சியில் அம்மா, அண்ணன்கள் எல்லோரும் அழுகிறார்கள், எங்கள் சாலையை மறைத்து அப்பாவை எடுத்து செல்கிறார்கள். கட்டைகள் அடுக்கப்பட்டு, என்னை அழைத்து தட்டில் எரியும் கட்டி கற்பூரத்தை எடுத்து சிதையில் போடச்சொல்கிறார்கள்.  கற்பூரம் விரல்களை சுட சட்டென்று அதை சிதையில் போடுகிறேன். தீ மெதுவாய் பரவுகிறது! ‘ம், அவ்வளவுதான், திரும்பி பார்க்காம போகனும்’  என்னை யாரோ ஆதரவாய் அழைத்துச் செல்கிறார்கள். விரலில் சூடு பட்ட இடம் எரிகிறது. சாம்பலில் காட்சி மறைய எனக்கு கலவையாய் குரல்கள் கேட்கத்துவங்கிறது. “ஃபார்ட்டி பர்சண்ட்ன்னாலே ஃபேட்டல், உங்கப்பாவுக்கு 80 பர்சண்ட் பர்ன் வூண்ட்ஸ்”. வேறு யாரோ சொல்கிறார்கள் “அதாவது ஃபயர் ஆனாலே முதல்ல பாதிக்க படறது கண்ணுதான், அது ரொம்ப சென்சிட்டிவ் பார்ட் இல்லையா! தீயோட வெப்பம் தாங்காம கண்கள் ஏறக்குறைய உருகிடும். அதுக்கப்புறம் இருந்த நிமிஷம் எல்லாம் பார்வை இருக்காது, இது நாள்வரை வாழ்ந்த நிமிடங்களின் அனுபவங்கள் தரும் அனிச்சைலதான் யாரோ தன் அருகே வருவது புலனில் தெரியும். அதுகூட அப்போ அந்த நிமிஷத்துல உடம்பை வருத்தும் ரணவேதனையை கடக்கும் மனத்திட்பம் உள்ளவங்களாலதான் உணரமுடியும்” அப்பா வீட்டிலுள்ள எல்லோரிடமும் பேசியிருக்கிறார். மரணம் அறிவிக்கப்பட்ட 8 மணி நேரம் கழித்து கொள்ளி வைக்கமட்டும் வந்து சேர்ந்த என்னிடம் சொன்னார்கள்.

 

FL_31father-son

FatherSon_Full

அதுசரி, நான் இப்போ எங்  கேயிருக்கிறேன்? தாளமும் ஜதியும் நின்று போய்! அட, நிற்கும் இடம் கூட ஏதோ பஸ்ஸ்டாண்ட். நிறைய பஸ்கள் ஈசிஆர் வழி, திண்டிவனம் வழி என சென்னை செல்லும் பஸ்கள் நிறைய நிற்கின்றன! இது பாண்டிச்சேரி பஸ்ஸ்டாண்ட்! டிவிடி வாங்கச் சென்ற நண்பர்கள் திரும்பிவிட்டிருந்தனர். கட்டனக்கழிப்பிடத்தில் 50பைசா எனப் போட்டிருந்தது, ஆனால் அவன் 1ரூவாய் கேட்டான். வழக்கமாய் முறுக்கேறி சண்டைக்கு தயாரகும் மனசுக்குள்ளே அவன் தோம் தோம் என ஆடிக்கொண்டிருக்கிறான்! தெரியும், இனி ஊர் போய் அம்மாவைப் பார்க்கும்வரை அவன் ஆட்டம் நிற்காது! 2 நாளில் வீட்டு வாடகை, பால் பணம், மளிகை, கிரிடிட்கார்டு பாக்கி எல்லாம் தரவேண்டும். பர்ஸில் 150ரூவாய் உள்ளது, கோயம்பேட்டிலிருந்து ஆட்டோவுக்கு 50ரூவாய் போய்விடும். திரில்லர் மைக்கேல் ஜாக்சன் மாதிரி உள்ளே அவன் கெக்கெக்கெக்கேஃ….. என சிரித்து ஆட்டத்தை முடித்துக்கொண்டிருந்தான்.

Pondy Busstand

பஸ்ஸில் வீடியோ போட்டு அல்றவிட்டார்கள். நான் தூங்கிப்போய்விட்டேன். அவன் மங்கலான ஒளியில் காற்றில் பறந்து பறந்து சாம்பல் உதிர  ஆடத்தொடங்கினான்!

siva4

Tuesday, July 7, 2009

ஹைவேஸ் மோட்டல்களுக்கு வருவானா அந்நியன்?



பாண்டிச்சேரியிலிருந்து இந்த பதிவு.

மாலை 6-30 மணிக்கு சென்னையில் கிம்பியது அரசு டீலக்ஸ் பஸ். 8 மணிமுதல் பயணிகள் பலருக்கு (அடி)மடியில் கனமிருந்த்தால் வலியில் பயமாகி கதறினாலும் கவலையேபடாத டிரைவர் கடுமையாய் போய்க்கொண்டேயிருந்தார். எப்படியோ 9-15க்கு மரக்கானம் ஈசிஆர் ஆனந்த் இன் என்கிற ஹைவேஸ் மோட்டலுக்குள் பஸ் போய் நின்றது. ஒரு 100மீ த்டையோட்டம் மாதிரி குத்திதோடிய பலரும் அங்குள்ள கட்டனக்கழிப்பிடத்தை தவிர்த்து ஓரங்களிலேயே ஒதுங்கினர். நண்பரும் நானும் ஒரு ஆர்வத்தில் .கவுக்கே போலாம் என "பெரிய புத்தனுக" மாதிரி அங்கு சென்றோம். ..வை நெருங்கியதும் ரொம்ப மோசமாக பயங்கர நாற்றம்.. தாங்க முடியலை. வேறுவழியின்றி வெட்டவெளியை சரணடைந்தோம். பிறகு அங்குள்ள ஓட்டல் , அது க.கவுக்கு மிக அருகிலும், வெட்டவெளி தூசுகள் எளிதாக பறந்துபோய் அண்டும் அன்மையிலேயே அதுவும் வெட்டவெளியிலேயே! ஒரே வித்தியாசம் அங்கே சில மணிதர்கள் உட்கர்ந்து................. சாப்பிட்டுகொண்டிருந்தனர்.

பரோட்டா, சப்பாத்தி, தோசை என்று ஒரு அவலக்குரல் திரும்ப திரும்ப கூவியது! பசி வேளை என்றாலும் நாங்கள் வந்த பஸ் டிரைவர் கண்டக்டர் நீங்கலாக யாரும் சாப்பிட போகவில்லை. என் சாப்பாட்டு ஆசைக்கு தன் முன் அனுபவத்தை சொல்லி நண்பர் தடை போட்டார். எனக்கு அந்த நிமிடத்தில் டிரையையும் கண்ஸையும் அன்பாக பார்க்கத் தோண்றியது! காரணம் அவர்கள் இருவரும் வழக்கமான கட்டு போலும், கட்டிக்கொண்டிருந்தனர்.

சரி டீயாவது குடிப்போமென மற்றொரு கவுண்ட்டரை முயன்றோம். உவ்வேக்..., கண்றாவி எப்போது எடைகட்டிய பாலோ ஈஸ்வரா! கல்லாப்பெட்டியிலிருந்த கழுத்து தென்படாத ஒரு ஒபிசிட்டி சிறுவன், அவனருகேயிருந்த போண்டாவை நான் சாப்பிட முற்பட்டபோது காட்டிய முகபாவம் தூக்குதண்டனை கைதிக்கு கழுத்தில் கயிறு மாட்டி விட்டு லிவரை இழுக்க காத்திருப்பவன் மாதிரியே இருந்தது. ஆஹா போண்டா.!!! ...... ஒன்ஸ்மோர் உவ்வேக்!!

நண்பர் வெறுத்துப்போய் தண்ணீர் பாட்டில் வாங்கினார் 12ரூவாய் பாட்டில் 15ரூவாய். மற்றொருவர் ஒரு கிங்சைஸ் சிகரெட்டுக்கு 5 ரூவாய் கொடுத்துவிட்டு 50பைசா பாக்கிக்கு கை நீட்டினார். “சார், ஹைவேஸ் மோட்டல்லெல்லாம் கிங்ஸ் 5 ரூவாய்தான்" என்று நெடுஞ்சாலை பிரனாப் முகர்ஜி மாதிரி அதிகாரமாக சொன்னார். ஒருவேளை ஒரிஜனல் முகர்ஜி காலைலே கிங்ஸ் விலைய மாத்திபுட்டாரோ? நியாயம், நீதி, நேர்மை, நுகர்வோர் உரிமை என நான் பேசத்தொடங்குவதற்காண சூழலே அங்கில்லை. பஸ் இன்ஞின் உறும, விட்டது சனி!

பாண்டி ஹோட்டல் அறையில் டிவியை முடுக்க என்னற்ற லோக்கல் சேனல்கள். அடடா பாரதியார் காலம் தொட்டு சென்னை அதிகார வர்க்கத்திற்கு கட்டுபடாத பிரதேசமாகவே பாண்டி இருக்கும் போலும். எஸ்.சி.வி மட்டும் இங்கு இருந்தால் லோக்கலாவது கேபிளாவது! வெட்டிப்புடமாட்டோம் வெட்டி! இப்படியாக எண்ணற்ற லோக்கல்கலைக் காண ரிமோட் மீது ஒரு தனி பாசமே வந்தது.

ஒரு உள்ளூர் சேனலில் அந்நியன். சினிமா கேமராவுக்கு முன்பக்கம் மயிரை தொங்கவிட்டபடி குரல்வளை கேன்சர் வந்த மாதிரி ‘பாடு மாடு என் அந்நியன் வசனம் பேசத்தொடங்கினான். ரயில்வே கேண்ட்டின்காரனை சொக்கன் 65 போட்டுக்கொண்டிருந்த அந்நியனைப் பார்க்க மரக்கானம் ஈசிஆர் ஆனந்தின் நினைவு வந்தது. ச்சே, நம்ம அந்நியன் அம்பி இந்த மாதிரி ஹைவேஸ் ஹோட்டலுக்கெல்லாம் வந்தா எவ்வளவு நன்னாயிருக்குனு நினைக்கறச்சே, இங்கு அந்நியன் கருப்பாய் சராசரித் தமிழ் பேசும் சொக்கனை கொன்று முடித்திருந்தான். டக்கென நினைவு மாறியது! அட, ஆமாம்ல நம்ம சங்கரோட அந்நியன் தப்பு செய்யற மத்தவாளைத்தானே கொல்லுவான். அது சம்பந்தப்பட்டவாளாயிருந்தா “ஃப்பூ கிச்சலிக்காஃ சொல்லி பூச்சாண்டி காட்டிட்டு போயிடுவானே!. நிலத்தை சிஎம்டிஏவில அண்டர்வேல்யு காட்டிய மனைவியின் கழுத்தை முறித்து இரயிலிலிருந்து எறியாமல் வாத்சல்யத்தபடியே, ஒரு கிழக்குடிகாரனை(ப்ளாஷ்பேக்கில் அவன் ஒரு கெட்டபயல்னு ஒரு லாஜிக்) கொண்று தொங்கவிட்டவுடன் டிடிஎஸ் முசிக்கில் எண்டு டைட்டில் ஓடியது நினைவு வந்தது.

அதுசரி மரக்கானம் ஆனந்திலும் யாரவது நீலு மாதிரி “ஐய்யோ என்ன ஒன்னும் பன்ணிடாதேள்னா அந்நியனும் ஃப்பூ காட்டிட்டு போயிடப்போறான். என் டீ கோபம் மறந்தது, அட்ங்கொய்யாலே, பிளாக்ல டிக்கட் வாங்கி கிரஃபிக்ஸ்லயும், சதா கவர்ச்சிலயும் மயங்கி, போதாக்குறைக்கு வடநாட்டுலர்ந்து ஒரு டிரஸ் போடத்தெரியாத வயசு பாப்பாவ கொண்டாந்து ஏவிஎம்ல செட்டு போட்டு வேற காட்டினாளே, இதையெல்லாம் லயிச்சு சொருகி படம் பார்த்த அவ்ளோபேரையும் தத்தமது செருப்பெடுத்து தம்மையே அடித்துக்கொள்ள வைத்த சங்கர் மாதிரியே நானும் பிரமாண்டமா படமெடுத்து பெரிசா பங்களா கட்டி, ஆபிஸ்ல பல கம்ப்யூட்டர்கள வாங்கி போடனும்னு ஆசை. தக்காளி, ஈசிஆர் ஆனந்த போய் ஒரு விஷயம்னு ப்ளாக்ல எழுதறதா முக்கியம்!!. புதுசா கிராபிக்ஸ்ல யோசிப்போம்!!