நீங்க யாரும் வான்னு கூப்பிடல, அதனால போறேன்!
என்னோட ப்ளாக்க சுருட்டி கட்டிகிட்டு ராத்திரியோட ராத்திரியாவோ, இல்ல பகலோட பகலாவோ ஏரியாவ வீட்டே ஓடிப்போயி பழையபடி இணையத்துல மேயற வேலைய மட்டும் செய்யலாமான்னு யோசிக்கிறேன்.
சொந்தமா ப்ளாக் தொடங்கற வரைக்கும் மனசுக்குள்ள என்னோட நினைப்பு என்னன்னா, நாம மட்டும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சா பல பேருக்கு பொழப்பு போயிடும்! மொத்த தமிழ் உலகமே நம்மை மட்டுமே பாக்கும், அப்புறமா பயங்கற பேமஸ் ஆயிடுவோம்! ரோட்ல, நெட்டுல நடக்க முடியாது! எல்லாரும் ஆட்டோகிராப் கேப்பாங்க! இப்பிடி பயங்கர கணா!
இப்பிடி ஒரு நெணப்ப, கணாவ வருஷக்கணக்கா மனசோட வச்சிருந்தவரைக்கும் பிரச்சணையில்ல. அதை சிலர் கிட்ட பேசினப்பதான், வந்திச்சு விபத்து! அட ஆமாங்க கரெக்ட், எவனெவனோ எழுதறான், அதுவும் கண்டதயெல்லாம் எழுதறான். உங்கள மாதிரி வாசிக்கற வழக்கம் உள்ளவங்க எழுதுனா ரொம்ப பிரமாதமா, ரொம்ப நல்லாயிருக்குமேன்னு அவங்க பேச பேச, நான் கைப்புள்ள ஆகிட்டேயிருக்கறேங்கற உண்மை நிலவரம் தெரியாம, புது தெம்போட ப்ளாக்கில் பேமஸாகிற கனவு பிருமாண்டமா விரிஞ்சுது! இதுல இன்னொரு பிரச்சணை என்னன்னா, எனக்கு கடுமையான வல்லின, மெல்லின மற்றும் கமா, புல்ஸ்டாப் த்கராறு. படிச்சது இங்கிலீசு பள்ளிக்கூடம், அங்க நாந்தான் தமிழ்ல முதல் மார்க் அதாவது 60லிருந்து 70. அங்க தப்பிச்சுட்டேன்! பிற்பாடு கையெழுத்து பத்திரிக்கை நடத்துனப்ப, என் ஆர்வத்த பார்த்துட்டு நண்பர்கள் தொலையுது போன்னு நம்ம எழுத்துல இருந்த பிழைகள திருத்திட்டாங்க! அதுக்கப்புறம் சன் டிவில நிகழ்ச்சிகள் இயக்குனப்ப கிறுக்கலாவே ஸ்கிரிப்ப்ட் எழுதி 4 வருஷம் ஓட்டியாச்சு! அங்க பெரிசா யாரு கையிலேயும் ஸ்கிரிப்ட கொடுக்கற வழக்கமில்ல! கான்செப்ட்னு இங்கிலீஷுல எழுதி துறை தலைவர்கள்கிட்ட கொடுப்போம்! எனக்கு அங்கே தமிழ் தகராறு வந்த இடம் - நான் இயக்கிய "நம்மநேரம்" நிகழ்ச்சி. அதுல விக்கியின் பாட்டு மச்சி பாடுன்னு ஒரு பகுதில பாட்டு டிவில ஓடும்போது அதுக்கு மேல் இந்த பாட்டாகப்பட்டது இந்த இடத்துல, இத்தன ரூவா செலவுல, இப்பிடி இப்பிடி இன்ன மாதிரி தயாரிக்கப்பட்டதுன்னு எழுத்து ஓடும். வீடியோ எடிட்டர தாஜா செய்யவும், எழுதும் போது வரும் கற்பணைகளை சேர்க்கவும் நானே அதை வாரா வாரம் டைப் அடிப்பேன். அதுல நான் செய்யற இலக்கண தவறுகளை தூரன் கந்தசாமி அவர்கள்தான் திருத்துவார். "இந்தியத்தொலைகாட்சிகளில் முதன்முறையாக" அப்பிடின்னு சன் டிவில ஒரு குரல் அப்பப்ப முழங்குமே அது இந்த தூரன் கந்தசாமி அவர்கள்தான். அவரு யாருன்னா பிரபல மறைந்த பெரியசாமி தூரன் அவர்களின் பேரன். இந்த தூரன் கந்தசாமி என்பவர் சன் டிவில Post Production துறையின் தலைவர். இப்போ அதவிட பெரிய போஸ்ட்ல இருக்கார். நான் சொல்றது நான் அங்கு பணிபுரிந்த 1999 - 2002 காலகட்டம். தூரன் ஐயா வராத நாட்களில் நல்ல தமிழ் தெரிந்த நண்பர்கள் திருத்துவார்கள். சில நேரம் நான் வேலையை முடிக்க நள்ளிரவோ மறுநாள் காலையோ ஆகும் போது, இலக்கன பிழை திருத்த ஆள் கிடைக்காது! அவ்வளவு தாமதமானதில் என் எடிட்டர் நண்பரும் ஒரளவுக்கு, அதாவது என்னை கொலை செய்யும் அளவுக்கு என் மேல் பாசமாக இருப்பார். அந்த மாதிரி நேரங்களில், மேற்படி நிகழ்ச்சியிலேயே முதலில் ஒரு எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்துவிடுவேன், அதில் " விக்கி நிகழ்ச்சியில் வரும் தகவல்கள் தமிழ் எண்கணித அடிபடையில் (Tamil Numerology) அமைக்கப்பட்டவையாகும் - தவிர அது இலக்கண பிழைகள் அல்ல" என்று போட்டுவிடுவேன். நகைசுவை நிகழ்ச்சி என்பதால் நான் இப்படி என் தமிழால் பிழைப்பு(?) நடத்திக்கொண்டிருந்தேன். என்ன ஒரு அயோக்கியத்தனம் இல்ல?
இப்ப ப்ளாக் எழுதனும்னு முடிவு பண்ணியாச்சு! எனக்கு என் தமிழரிவு லட்சணம் தெரியும். முடிஞ்சளவு தள்ளிப்போட்டேன். பல ப்ளாக்குள படிச்சுட்டு பின்னூட்டம்(பிண்ணூட்டமா?) போட்டேன்! யாரும் என் பின்ணூட்டத் தமிழ் பற்றி கண்டுகிட்டதா தெரியல!அப்பிடியே தைரியம் பிக்கப் ஆகி முடிவு எடுக்கையில, கிணறு ஆழம் பாக்க ஊரான் ஊட்டு பிள்ளைய இறக்கிவிட்ட கதையா, நண்பர் செந்தில் குமரன உசுப்பி, பிளாக் எழுதுங்க செந்தில், அட்சென்ஸ்ல காசு தருவாங்க, ப்ளாக்க பாக்கறவங்கல்லாம் கம்ப்யூட்டர் முன்னாடி எழுந்து நின்னு கை தட்டுவங்கன்னு பல பிட்டுகள போட்டு அவரும் susenthilkumaran.blogspot.com னு ஆரம்பிச்சிட்டாரு. அவரு ஏதோ ஒன்னு ரண்டு எழுதுவாருன்னுதான் எதிபார்த்தேன். மனுசனா அந்தாளு! எழுதறரு எழுதறாரு அப்பிடி ஒரு நடை, கருத்து! எனக்கு வேர்த்து போச்சு! அப்புறம்தான் ஞாபகம் வந்துச்சு, அவரு முன்னாள் விகடன் மாணவ நிருபர், இடையில சன் டிவி, இந்நாள் தேவி, தமிழக அரசியல்னு வெளுத்து வாங்கற பார்ட்டி, நல்ல தமிழ் தெரிஞ்ச ஆளு! அதுசரி அவர தமிழுக்காகவா இறக்கிவிட்டோம்! ப்ளாக்குகல்லவா இறக்கினோம், ப்ராஜக்ட் சக்சஸ்!!
ஆனாலும் என்னோட டார்கெட் என்னன்னா, ப்ளாக்ல ஏதாச்சும் பெரிசா, பயங்கரமா, வித்தியாசமா எழுதி கலக்கிடனும்! ஆனா.... ப்ளாக்க ஆரம்பிச்சு மேட்டர அடிக்க ஆரம்பிச்சா..... மனசு முழுக்க டோட்டல் blank! ஒரு வேளை writer's blockஓன்னு ஒரு டவுட்! அது writerக்குதானே வரனும்? அப்புறம்தான் புரிஞ்சுது, நான் பொதுவா தமிழ் ப்ளாக்குகள்ல செல்வேந்திரன்ல தொடங்கினா, லக்கிலுக், பரிசல்காரன், கேபிள்காரன்னு டோண்டுவரைக்கும் ஒரு ரவுண்டு வருவேன், தமிழ்மணம் சுட்டி அத்தனையும் கிளிக் செய்து படிப்பேன், ஆனா அதுதா பிரச்சணைன்னு தெரிஞ்சுது! அத்தாம்பெரிய ஆளுகளையும், அவங்க போடற கருத்து, கொள்கை சண்டைகளப்பார்த்து என் மனசு கலக்கமாயிடுது! ஓகே ஓகே, மாத்தி யோசி!!
இதுல அப்பப்ப பின்நவீனத்துவம், பின்நவீனத்துவம்னு ஒரு விஷயம் அடிபடுது! அது என்னன்னே எனக்கு தெரியாது! செந்தில்கிட்ட கேட்டா நவினத்துவம் வந்ததுகப்புறம் வந்ததுதான் பின்நவினத்துவம்னு சொன்னாரு! நல்ல விளக்கமுங்க! நானும் யோசிச்சேன், ஆனாலும் என்னதான் நண்பருன்னாலும் செந்தில் மாதிரி ஒரு போட்டி எழுத்தாளர்கிட்ட போய் விளக்கம் கேட்டது நம்ம தப்புன்னு புரிஞ்சுது. யாராவது நல்ல தமிழ் வாத்தியாரா போய் கேக்கலாமுன்னு முடிவு எடுத்து... மாத்திகிட்டேன்.
முன்காலத்துல நான் சாருவோட கோணல் பக்கங்கள் முதல் பாகம் படிச்சுட்டு அவருக்கு அனு(ணு)க்கனா மாறி சுத்திக்கிட்டிருந்தவன், கோ. ப - 2 படிச்சேன், லைட்டா சுத்துச்சு! இப்போ சமிபத்துல ஃபேன்ஸி பனியனும் எக்ஸ்டென்ஷியலிஸமும் (கரெக்டா சொல்றனா) படிச்சேன், நல்லாவே சுத்துச்சு! மன்னிப்பு கேட்டுட்டு புஸ்தகத்த மரியாதையா கீழ வச்சுட்டேன். ஏன்னா பலபேரு அவர பாராட்டி கொண்டாடும்போது, எனக்கு புரியலேங்கறதுக்காக தப்பு சொல்லக்கூடாது. இதுல வேற இங்க ப்ளாக்குகள்ல இவர மையமா வச்சு கடுமையா சண்டை போடுறாங்க!
National School Of Drama Workshopகள்ல நிறைய கலந்துகிட்டு, அதுவும் கேரளா காவாளம் நாராயண பனிக்கர் வழி வந்த வகையறக்கள் கூடயெல்லாம் நாடக பயிற்சிப்பட்டறையில கலந்துகிட்டப்போ Symbolism, Post Modernismகறதல்லாம் ஒரு வகையான வெளிப்பாட்டு நுட்பங்கறத தாண்டி ஒன்னும் சொல்லல. அது சொல்லறவன் கேக்கறவன் ரண்டு பேருக்கும் தெரியனும் அப்பதான் முழுமையான interpretation, அதாவது புரிதல் வரும், அப்பதான் அதன் அடுத்த தளத்துக்கு போலாம்னு சொல்லிக்கொடுத்தாங்க! சத்தியமா இத தாண்டி இந்த சமாச்சாரம் எனக்கு புரியல, தெரியல.
அதுக்கப்புறம் இலங்கைல விடுதலைபுலி தலைவர் திரு.பிரபாகரன் மரணமும், அதை பெரிசா காட்டிட்டு பல ஆயிரம் தமிழர்களை ஈவு இரக்கம் இல்லாம கொண்ணு போட்டாங்க! எது எப்படியோ, செத்து போயிட்டங்க! இழவு விழுந்திருச்சு! உலகத்துலயே கேள்வி கேக்க நாதியில்லாத இனமா தமிழர்களாகிய நாம ஆயிட்டோமே! இதுக்கு ஒரு பெரிய எதிர் விணை(ன) யில்லன்னா, நாளைக்கு எல்லாப்பக்கமும் இருக்கற தமிழனுக்கும், ஏன் தமிழ்நாட்டுல இருக்கற தமிழனுக்கும் இந்த முடிவு ஏன் வராதுன்னு என்னோட யோசனை. ஆனா, இங்க என்னடானா இது கரெக்ட், அவரு சாகத்தான் வேனும்! எத்தனை பேரு இவரால செத்தாங்கன்னு ஒரே விவாதம்! இந்த கேப்ல ஒருத்தரு சுபாஷ் சந்திர போஸோட பிரபாகரன ஒப்பிடப்போயி, இன்னொருத்தரு போஸே தப்பு இவரு என்ன பெரிசான்னு கேக்கறாரு! மகாத்மா காந்திய கூட திட்டியிருக்கற பதிவு ஒன்னு பார்த்தேன்! திட்டுன்னா வெறும் திட்டு இல்ல! பயங்கர லாஜிக்கோட வார்த்தைகளை பதிவு செய்திருந்தாங்க! எனக்கா ரொம்ப விசனம், நண்பர்கள் அனுப்பற வீடியோ இணைப்புகள்ல நம்ம தமிழன் ரோட்ல அடிபட்ட நாயா கூடாரங்கள்ல கிடக்கறான்! நம்மாளுக பெரியவங்க, சின்னவங்க சோத்துக்கு வரிசையில நிக்கறாங்க! இந்த வரிசையும் பிணங்களும் குஜராத் நிலநடுக்கத்தப்போ, பீகார் வெள்ளத்தப்போ, நம்ம ஊரு சுனாமி காலகட்டத்துல எல்லாரும் பாத்ததுதான்! அது இயற்கை சீற்றம், அதுவும் தற்கலிகமானது! அனா இங்கே....முழு காலும் துண்டாகி சாகாம உயிரோட ஒரு சின்ன பையன் கதறிகிட்டுருக்கறான், நம்ம தமிழ் பொண்ணு ஒன்னு கர்ப்ப வயிறு கிழிஞ்சு உள்ள இருக்கற குழந்தை கையி மட்டும் வெளிய வந்துருக்கு! இன்னும் என்னன்னமோ! ஆனா இங்க என்னடான்னா இணையத்துல சண்டை நடக்குது, பத்திரிக்கைகள்ல புது ரஜினி படத்துக்கு போடறமாதிரிதான் செய்தி அளவுகள் இருந்துச்சு! அட நம்ம இனம் அங்க கொத்து கொத்த செத்து கிடக்கறங்க, அதுக்கு இவ்வளவுதான் நம்மோட ரியேக்ஷ்னா?
இப்போ அதெல்லாம் முடிஞ்சு போச்சு! புது எலக்சன் விஷயங்கள் பேசறாங்க!
திடீர்னு இலங்கைல ஆன மாதிரி இங்க தமிழ்நாட்டுலயும் நம்மளயெல்லாம் போட்டு கொன்னாங்கன்னா, நாமளும் இப்பிடித்தானே நாதியத்து கெடப்போம்? கருமம், இந்த நினைப்புலர்ந்து வெளிய வரவே முடியல! நேத்து பேஸ் புக்ல ஒரு இலங்கைதமிழ் இளைஞன் chatல வரான். மனசே பகிருங்குது! ஏண்டா நீயே அகதியாட்டமா இருக்கற, உனக்கேது இண்டர்நெட்னு ஒரமா ஒரு கேள்வி வருது! எழவு, நாம இலங்கைய பாத்தமா, அங்க பங்கர் குழி எப்பிடியிருக்குமுன்னு தெரியுமா, ஷெல் அடிக்கறதுன்னா என்ன? கிளஸ்டர் குண்டு கண்டமா? பொட்டி படுக்கைய தூக்கிட்டு கால் நடையா ஒடியிருக்கமா? என்ன தெரியும்? அதெல்லாம் பரவால்ல, இன்னைக்கு, இப்போ அவங்க நிலைமைதான் என்னன்னு நமக்கு பெரிசா தெரியும்? ஆனா இந்த கோணகேள்வி மட்டும் மனசுக்குள்ள டக் டக்னு வருது! அந்த தம்பி சொல்றான், அவனோட அம்மாவ பாத்து 5 வருஷ்மாச்சாம், குரல கேட்டு 2 வருஷத்துக்கு மேல ஆச்சாம்! எங்க கதிய பாத்தீங்களா அண்ணேங்கறான். பல விவரங்கள் சொல்றான். மானிட்டர் முன்னாடி அழுதுகிட்டு உக்கார்ந்துட்டிருக்கேன். சகதமிழர்கள் சாகிறத செய்தியா கேட்டுகிட்டு மானக்கெட்டுபோய் இங்கே அன்றாடம் பொருள் தேடும் வாழ்கையில கிடக்கிறம்பா, என்னைப்போல அளுக்கும் ஈழத்துக்கும் இடைல இருக்கறது கடலா, பயமா, சுயநலமான்னு தெரியலய்யான்னு சொல்றேன். எதையும் யோசியாதையுங்கோன்னு பதில் சொல்லறான் அந்த தம்பி. நானும் என்னைப்போன்ற இளைஞர்களும் சீவிச்சிருப்பமோ மாட்டமோ, நிலைமை சீரானவிட்டு ஒரு நடை வந்துட்டு எங்கட மண்ணுக்கு வந்துட்டு போவியளான்னுகேக்கறான்! என்னால தாங்க முடியல! எனக்கு நேரம் முடிஞ்சுட்டது, பிறகு பார்ப்பம்ன்னு லாகவுட் செய்துட்டு போயிட்டான். எனக்கு பலநேரம் முத்துகுமார் ஞாபகம் வருது! அவனும் தமிழன், நானும் தமிழன்! பிரமாதம்டா!!
நானொன்னும் அழுதுட்டு கிடக்கல, தூங்குனேன். காலைல போஸ்ட் ஆபிஸ் போனேன், EBல போய் மீட்டர் ரண்டு மடங்கு சுத்துதுன்னு கம்ப்ளய்ண்டு குடுத்தேன். பசியடங்கறளவு சாப்புட்டேன். என்ன குறைச்சல்? இப்போ மத்தியானம் ப்ளாக்க தொறந்து பார்த்தா, மத்தவங்க டெய்லி எழுத்றாங்க, நாம வாரத்துல ஒன்னாவது எழுதலயேன்னு ஒரு சுய பச்சாதாபம்! இனையத்தொடர்ப பயன்படுத்தி ஆன்லைன்ல சம்பாதிக்கறதுக்கு 3 வாரமா பல விதமா பல்டியடுச்சுட்டிருக்கறேன், ஒன்னும் நடக்கல! இங்கிலீஷு ப்ளாக் ஒன்ன ஆரம்பிச்சு, புடிக்காத பொண்டாட்டிய திருவிழாவுல தொலச்சவன் கணக்கா அந்த ப்ளாக் பக்கம் போகாமலேயே திரியறேன்.
அதுதான் பாத்தேன், இது ஒன்னும் வேலைக்காது! கிளம்பிருலாம்னு ஒரு தீர்மானம்! ஆமா, பின்னென்ன? தமிழ்மணத்துல இணைச்சாசு, தமிழ்10லயும் சேத்தியாச்சு, சினிமா விமர்சனம், புத்தக விமர்சனம்....ம்ஹும்! ஒன்னு நடக்கல! பொட்டிய கட்ட வேண்டியதுதான்!!!
(யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தில், நான் இந்தப்பதிவை உள்ளிடவில்லை. இது முழுக்க முழுக்க என் தற்பொதைய மனநிலையின் வெளிப்பாடு மட்டுமே!)